நாடு முழுவதும் உள்ள ரயில் நிலை யங்களில் ஒன்றிய அரசின் சாத னைகளை விளக்கும் வகை யில், பிரதமர் மோடியின் உருவத்துடன் செல்பி பாயிண்ட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த செல்பி பாயிண்ட்களுக்கு எவ்வ ளவு செலவிடப்பட்டுள்ளது என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த போஸ் என்பவர் 5 மண்டலங்களுக்கும் கேள்வி எழுப்பி இருந்தார். ஆனால் மத் திய ரயில்வேயின் சார்பில் மட்டும் போஸின் கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டது.
அதில் “ஏ பிரிவு” ரயில் நிலையங்களில் ஒரு செல்பி பாயிண்ட் அமைக்க 1.25 லட்சம் ரூபாயும், “சி பிரிவு” ரயில்வே நிலையங்களில் 6.25 லட்சம் ரூபாயும் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட் டுள்ளது. அரசியல் ஆதாயத்துக்காக “செல்பி பாயிண்ட்” என்ற பெயரில் மக்கள் வரிப் பணத்தை மோடி அரசு வீணடித்து வரு வதாக “இந்தியா” கூட்டணிக் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலை யில், ஆர்டிஐ தகவலை வெளியிட்ட மத் திய ரயில்வேயின் செய்தி மற்றும் மக்கள்
தொடர்புத் துறை அதிகாரியான சிவ்ராஜ் மனஸ்புரே வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, ஆர்டிஐ கீழ் பதில ளிக்க கட்டுப்பாடு விதித்துள்ளது ரயில்வே வாரியம். மண்டல பொது மேலா ளர்களுக்கு ரயில்வே வாரியம் அனுப்பி யுள்ள கடிதத்தில், “தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மண்டல ரயில்வே அலுவலகங்கள் மற்றும் பிற அலகுகள் வழங்கும் பதில்கள் தரமற்றவையாக உள்ளதாக கூறப்படுகிறது. பதில்களை அனுப்ப தாமதமாவதால் வேலைப்பளு அதிகரிப்பதுடன் ரயில்வேக்கு அவப் பெயர் ஏற்படுவதாகவும் உள்ளது. இத னால் தரமான பதில்கள் என்பதை உறு திப்படுத்தும் நிலையில் இனி மண்டல பொதுமேலாளர், கோட்ட பொதுமேலா ளர் ஒப்புதல் பெற்றே அனுப்ப வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.