india

எப்ஐஆர் கூட போடாத வழக்கில்தான் ராகுலிடம் விசாரணை நடக்கிறது! ப. சிதம்பரம் கடும் சாடல்

புதுதில்லி, ஜூன் 14- நேசனல் ஹெரால்டு பத்திரிகை தொடர்புடைய அசோசியேட் ஜர்  னல்ஸ் நிறுவனத்தின் பங்குகளை ‘யங் இந்தியா’ நிறுவனத்திற்கு மாற்றியதில் முறைகேடு நடந்தி ருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், காங்கிரஸ் தலை வர் ராகுல் காந்தியை அமலாக்கத் துறையினர் திங்களன்று 9 மணி  நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர்.  இரண்டாவது நாளாக, செவ்  வாய்க்கிழமையன்றும் இந்த விசா ரணையை அவர்கள் தொடர்ந்தனர். இதனிடையே, காங்கிரஸ் மூத்த தலைவரும், ஒன்றிய முன்  னாள் நிதியமைச்சருமான ப. சிதம்ப ரம், தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி  களில் கலந்து கொண்டு, நேசனல் ஹெரால்டு விவகாரம் தொடர்பாக விரிவாக பேசியுள்ளார்.  “நேசனல் ஹெரால்டு தொடர் பான வழக்கு சிரிக்கும்படியாக இருக்கிறது. வருமான வரிப் புகா ருக்கு கீழ் இந்த வழக்கை பதிவு  செய்யவே முடியாது. சிபிஐ, தில்லி  போலீஸ் யாராவது இதில் எப்ஐஆர் பதிவு செய்து உள்ளார்களா?  இந்த வழக்கில் தவறான பண  பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ள தாக கூறுகிறார்கள். அதற்கு என்ன  ஆதாரம்? எல்லா பரிவர்த்தனையும் வெளிப்படையாக நடந் துள்ளது. இதில் எங்கே முறைகேடு நடந்துள்  ளது. அவர்களால் காட்ட முடியுமா?  நேசனல் ஹெரால்டு வழக்கில்  யார் மீது யார் எப்.ஐ.ஆர். போட் டது? எப்.ஐ.ஆர். நகலையே இன் னும் தரவில்லையே ஏன்? எப்ஐ ஆரில் யார் மீது தவறு, என்ன தவறு என்று எங்காவது கூறப்பட்டு இருக்  கிறதா? திட்டமிடப்பட்ட குற்றம் (Scheduled Offence) என்று கூறப்  படும் இந்த வழக்கில் எங்கும்  எப்ஐஆரே பதிவு செய்யப்படவில்லை.

எப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட பின்னர்தான் பிஎம்எல்ஏ (கறுப்புப் பணத்தை வெள்ளை ஆக்குவது) குற்றச்சாட்டு தொடர்பாக விசா ரணை நடத்தப்பட வேண்டும். திட்ட மிடப்பட்ட குற்றத்தின் (Scheduled Offence) கீழ் எப்ஐஆர் பதிவு செய்  யப்படாத நிலையில் கறுப்புப் பணத்தை வெள்ளை ஆக்குவது பற்றி விசாரணை செய்யவே முடியாது.  ஒன்றிய ஆளும் பாஜக அரசு, சட்டத்தையோ ஜனநாயகத்தை மதிப்பது இல்லை என்பது வெளிப்  படையாகவே தெரிகிறது. அம லாக்கப் பிரிவு சட்டத்தை மதித்து நடந்தால் எங்களுக்கு சிக்கல் எது வும் இல்லை. அமலாக்கப் பிரிவு சட்டத்தை மதிப்பது இல்லை என் பதுதான் பிரச்சனை. ஒன்றிய அரசு சட்டத்தை துச்சமாக மதிப்பதா லேயே நாங்கள் போராடுகிறோம்.  கடந்த 4, 5 ஆண்டுகளில் எந்த  ஒரு பாஜக தலைவருக்கு எதிராக வும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்திருக்கிறதா?” என்று அடுக்கடுக்கான கேள்விகளை அவர் எழுப்பியுள்ளார்.