ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது உரையில் வடகிழக்கு மாநிலங்கள் என்று மட்டுமே கூறியுள்ளார். 200 பேர் கொல்லப்பட்டு, பல ஆயிரம் மக்கள் வீடுகளை இழந்து தவிக்கும் மணிப்பூரை பற்றி ஒருமுறை கூட அவர் பேசவில்லை. மணிப்பூருக்கு தீர்வு வேண்டும். மணிப்பூரை புறக்கணிப்பது தீர்வு ஆகாது. மோடியின் மூன்றாவது ஆட்சியில் மணிப்பூர் விவகாரம் பெரிய உள்நாட்டு பிரச்சனையாக மாறும்.