டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதாவுக்கு, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
மக்களின் தனியுரிமையை பாதுகாக்கும் நோக்கில், டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா தனிநபர்களின் தரவுகளை தவறாகப் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு, 250 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று ஒன்றிய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் மணிப்பூர் விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நேரத்தில், டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதாவை கடந்த ஆகஸ்ட் 7 அன்று மக்களவையிலும், ஆகஸ்ட் 9 அன்று மாநிலங்களவையிலும் மோடி அரசு நிறைவேற்றிக் கொண்டுள்ளது. இதனை தொடர்ந்து குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக மசோதா அனுப்பிவைக்கப்பட்டது.
இந்நிலையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு டிஜிட்டல் தனி நபர் பாதுகாப்பு மசோதாவுக்கு கையெழுத்திட்டார். இந்த மசோதா விரைவில் சட்டமாக்கப்பட உள்ளது.