india

img

ஹைதராபாத் மரணத்தை விசாரிப்பதற்கு பதிலாக ரோஹித் வெமுலாவின் சாதியை ஆய்வு செய்த போலீஸ்

ரோஹித் வெமுலாவின் மரணத்திற்கான கார ணத்தைக் கண்டுபிடிப்  பதற்குப் பதிலாக, ரோஹித்தின் சாதியைக் கண்டறிவதில் காவல் துறையின் விசாரணைக் குழு கவ னம் செலுத்தியது. வழக்கில் குற்றம்  சாட்டப்பட்டவர்களின் பங்கு மற்றும் மோதலை உருவாக்கிய ஏபிவிபி செயல்பாட்டாளர்களின் பங்கு குறித்து  விசாரிக்க அவர்கள் ஆர்வம் காட்ட வில்லை. இந்த வழக்கை ஆரம் பத்திலேயே அலட்சியமாக அணு கியது காவல்துறை. பல்கலைக் கழ கத்தில் போராட்டம் நடப்பதாகக் கூறி  நடவடிக்கையை தாமதப்படுத்தியது.

2016 ஜனவரி 17 அன்று, சாதி  பாகுபாடு காரணமாக ரோஹித் வெமுலா ஹைதராபாத் பல்கலைக் கழக விடுதி வளாகத்தில் உள்ள  விடுதி அறையில் தற்கொலை செய்து  கொண்டார். ஆனால் மூடப்பட்ட உறையில் நீதிமன்றத்தில் சமர்ப் பித்த அறிக்கையின்படி, ரோஹித் தலித் சமூகத்தைச் சேர்ந்தவரல்ல என்றும், பொய்யான ஆவணங்க ளின் அடிப்படையில் கிடைத்த  பலன்கள் வெளியே தெரிந்து  விடுமோ என்ற பயத்தில் தற் கொலை செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த அறிக்கை விவாதத்தை ஏற்படுத்தியதால், தெலுங்கானா காவல்துறை தலை வர் மே 3ஆம் தேதி அந்த அறிக்கை யை நிராகரித்து, மறு விசார ணைக்கு உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்  பட்டவர்கள் அப்போதைய ஹைத ராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் பி.அப்பா ராவ், செகந்திரா பாத் எம்.பி., பண்டாரு தத்தாத் ரேயா, எம்எல்சி என்.ராம்செந்தர் ராவ், ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி  இரானி மற்றும் ஏபிவிபி தலைவர் கள். ஆனால் அவர்களின் பங்கை  விசாரிக்க காவல்துறை போதிய  முயற்சி மேற்கொள்ள வில்லை.  ஹைதராபாத் பல்கலைக்கழகத் தில் பிஎச்டி மாணவர் என்கிற நிலை யில் ரோஹித் வெமுலாவுக்கு படிப்  பில் ஆர்வம் இல்லை. போராட்டங்க ளில்தான் அவரது ஆர்வம் இருந் தது என்கிற குற்றச்சாட்டும் கூட காவல்துறையின் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது.

“எவ்வளவு முயற்சிகள் செய்தா லும், குற்றம் சாட்டப்பட்டவரின் செயல்  கள் ரோஹித்தை தற்கொலைக்கு இட்டுச் சென்றது என்பதற்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை” என்  கிற வாசகங்கள் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. அவர் இறப்ப தற்கு ஒரு மாதத்திற்கு முன்பு, விஷ மும் கயிறும் கேட்டு துணை வேந்த ருக்கு ரோஹித் எழுதிய கடிதத்தை  காவல்துறையினர் முற்றிலும் புறக் கணித்தனர். அந்தக் கடிதத்தை தற்கொலைக்கான காரணமாகக் கருத முடியாது என்றும், எழுதும் போது ஏற்பட்ட விரக்தியும் கோப மும் காலப்போக்கில் மறைந்திருக் கலாம் என்றும் அறிக்கை கூறு கிறது.

‘தனது பிறப்பே மிகப்பெரிய  துயரம்’ என தற்கொலைக்குறிப் பில் குறிப்பிட்டிருந்த வார்த்தைகள் மீது காவல்துறை நம்பிக்கை கொண்டிருந்தது, ரோஹித் மிகுந்த  மன உளைச்சலில் இருந்ததையும்,  விரக்தியில் இருந்ததையும் உறு திப்படுத்த இந்த வார்த்தைகளை காவல்துறையினர் பயன்படுத்தி னர். ரோஹித்தின் தாயாரை டிஎன்ஏ  பரிசோதனைக்கு ஆஜராகுமாறு காவல்துறையினர் கேட்டுக் கொண்  டனர்.

2016 ஆம் ஆண்டில், இந்த வழக்  கின் முதல் விசாரணையை ஹைத ராபாத், மதாப்பூர் பிரிவு காவல் துறை உதவி ஆணையர் எம்.ரமண  குமார் நடத்தினார். பின்னர் ஏசிபி  என்.ஷியாம் பிரசாத் ராவ், இறுதி யாக ஏசிபி சி.ஸ்ரீகாந்த் ஆகியோர்  விசாரணை நடத்தினர். அறிக்கை யின்படி, விசாரணை தொடங்கிய தும், பல்கலைக்கழகத்தில் ரோஹித் மரணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் நடத்தி னர். அதனால் இது விசாரணைக்கு  உகந்த சூழல் இல்லை என்றும் நேரத்தை மிச்சப்படுத்தும் வகை யில், பல்கலைக் கழகத்திற்கு வெளியே  உள்ள ஆதாரங்கள் முதலில் சேக ரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த  மாணவர்களுக்கு சுயமரியாதை யை ஏற்படுத்தும் வகையில் சாதி வாரியாக இடஒதுக்கீட்டை உறுதி  செய்யும் நோக்கில் ரோஹித் வெமுலா சட்டத்தை அமல்படுத்துவோம் என்று கடந்த ஆண்டு நடைபெற்ற  பிளீனரி கூட்டத்தில் காங்கிரஸ் உறு தியளித்தது. ஆனால், தெலுங்கா னாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த  நான்கு மாதங்களில் வழக்கு முடித்து வைக்கப்பட்டது. இந்தியா ஒற்றுமை யாத்திரையின் போது காங்கிரசில் சேருமாறு ராதிகா  வெமுலாவை ராகுல் காந்தி அழைத்தது குறிப்பிடத்தக்கது.

ஏபிவிபி தலைவரை அடித்த தற்காக விடுதியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்ட ஐந்து தலித்  ஆராய்ச்சி மாணவர்களில் ரோஹித்  ஒருவர். போராட்டத்தை தொடர்ந்த ரோஹித் தனது உயிரை மாய்த்துக்  கொண்டார். ஒன்றிய தொழிலாளர்  அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா,  மாணவர் மோதல் குறித்து விசா ரணை நடத்தக் கோரி, மனிதவள  மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி  இரானிக்கு எழுதிய கடிதத்தில்,  இதே போன்ற எதிர்மறையான கருத்துகள் உள்ளன. தலித் மாண வர்கள் பயங்கரவாதிகள், தேச விரோதிகள், சாதிவெறியர்கள் என்று  முத்திரை குத்தப்பட்டனர். கல்லூரி  வளாகத்தில் நடந்த புறக்கணிப்பு தான் ரோஹித்தின் மரணத்திற்கு வழிவகுத்தது என்று மாணவர் அமைப்புகள் தெரிவித்தன.

நாடு முழுவதும் போராட்டம் வெடித்ததால், நாடாளுமன்றத்தில் ராகுல் காந்திக்கும், ஸ்மிருதி  இரானிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன்  மூலம் தத்தாத்ரேயா மற்றும் பல்க லைக்கழக துணைவேந்தர் பி. அப்பாராவ் மீது பழங்குடியின ருக்கு எதிரான வன்கொடுமை தடுப்  புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு  செய்யப்பட்டது. இந்த விசாரணை யில்தான் காவல்துறையினர் இறுதி அறிக்கை அளித்தனர். ரோஹித் தலித் இல்லை என்ற வாதத்தை  எழுப்ப ஏற்கனவே முயன்றனர். அது  தவறு என மாணவர் அமைப்பின் பிரதிநிதிகள் எழுத்து மூலம் நிரூ பித்திருந்தனர்.