india

img

அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தும் பாஜக சதியை முறியடித்த ‘இந்தியா’ கூட்டணி

மக்களவைத் தேர்தல் பிரச்சா ரத்தை தடுக்கும் நோக்கத்தி லும், ஜார்க்கண்டில் ஆட்சியை  கலைக்கும் முனைப்பிலும் “இந்தியா”  கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜார்க்  கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலை வரும், முன்னாள் முதல்வருமான ஹேமந்த் சோரனை அமலாக்கத் துறை மூலம் கைது செய்து சிறை யில் அடைத்தது மோடி அரசு.  

ஆனால் ஹேமந்த் சோரன் கூட் டியே முதல்வர் பதவியை ராஜினாமா செய்து புதிய முதல்வராக சம்பாய் சோரனை அமர வைத்துவிட்டு சிறைக்கு சென்றார். குதிரை பேரம் மூலம் ஜேஎம்எம் - காங்கிரஸ் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஜார்க்கண்டில் ஆட்சியை கைப்பற்ற பாஜக ஆளுநர் மூலம் கால தாமத விளையாட்டை அரங்கேற்றி சதி செய்த நிலையில், எம்எல்ஏ-க்களை  காங்கிரஸ் ஆளும் மாநிலமான தெலுங்கானாவிற்கு அனுப்பி 24 மணி நேர கடும் போராட்டத்துடன் வெள்ளி யன்று முதல்வராக பொறுப்பேற்றார் சம்பாய் சோரன்.

சம்பாய் சோரன் முதல்வரான பின்பு தனது முதல் பேச்சிலேயே ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை  நீதி யாத்திரையில் ஜேஎம்எம் மற்றும் ஜார்க்கண்டில் “இந்தியா” கூட்டணி கட்சிகளுடன் கலந்து கொண்டு ஒற்று மையை ஏற்படுத்துவோம்” என அறிவித்து இருந்தார்.

மேற்குவங்க மாநிலத்தில் இருந்து  சனியன்று ராகுல் காந்தியின் இந்திய  ஒற்றுமை நீதி யாத்திரை ஜார்க்கண்டிற்  குள் நுழைந்தது. பர்கூரில் ஜேஎம்எம், காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள், ஊழியர்கள் மற்றும் ஜார்க்கண்ட் மக்கள் முன்னிலையில் முதல்வர் சம்பாய் சோரன் ராகுல் காந்தி யாத்திரைக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளித்தார். 

பாஜகவின் சதி முறியடிப்பு

யாத்திரையின் பொழுது செய்தி யாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “ஜார்க்கண்ட் மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை பாஜக சீர்குலைக்க முயன்றது. ஆனால்  “இந்தியா” கூட்டணி அதனை எதிர்த்து  நின்று பாஜகவின் சதியை முறிய டித்தது. பணபலம் மற்றும் விசா ரணை அமைப்புகளை பாஜக தன்  வசம் வைத்திருந்தாலும், அதைக்  கண்டு காங்கிரஸ் கட்சி அஞ்சப் போவது இல்லை” என பாஜகவிற்கு எச்சரிக்கை விடுத்தார்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் பங்கேற்க அனுமதி
நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பாக கைது  செய்யப்பட்டுள்ள ஜார்க்கண்ட் முன் னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் தற்போது  5 நாள் அமலாக்கத்துறை விசாரணை காவ லில் உள்ளார். ஹேமந்த் சோரன் கைது கார ணமாக புதிய முதல்வராக பொறுப்பேற் றுள்ள சம்பாய் சோரன் பிப்.5-ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் தனது பலத்தை நிரூபிக்க உள்ள நிலையில், நம் பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் பங்கேற்க ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் அனு மதி அளித்துள்ளது.