செவ்வாய்கிழமை அன்று (டிசம்பர் 17) நாடாளு மன்ற மாநிலங்களவை யில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா,”அம்பேத்கர்… அம் பேத்கர்… அம்பேத்கர்... என பேசு வது இப்போது பேஷனாகி விட்டது. அம்பேத்கர் பெயரைக் கூறுவதற்கு பதிலாக கடவுளை அழைத்திருந்தால் 7 ஜென்மமும் சொர்க்கத்தில் இடம் கிடைத்து இருக்கும்” என அம்பேத்கரை இழிவுபடுத்தும் வகையில் பேசி னார். அமித் ஷாவின் இந்த பேச்சிற்கு எதிராக நாடாளுமன் றத்தில் மட்டுமின்றி நாடு முழு வதும் பல்வேறு இடங்களில் போ ராட்டங்கள் நடைபெற்று வரு கிறது.
இந்நிலையில், அமித் ஷாவை கண்டித்து “இந்தியா” கூட்டணி எம்.பி.,க்களின் தொடர் முழக்கத் தால் நாடாளுமன்ற இரு அவைக ளும் 2ஆவது நாளாக முடங்கியது. வியாழக்கிழமை காலை நாடாளு மன்ற இரு அவைகளும் கூடிய பொழுது, அம்பேத்கரை அவ மதித்து பேசிய அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் மற்றும் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனக் கோரி “இந்தியா” கூட்டணி எம்.பி.,க்கள் தொடர் முழக்கங்களை எழுப்பி னர். இதனால் மதியம் 2 மணி வரை நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மீண்டும் 2.05 மணிக்கு அவைகள் கூடியது. ஆனால் அமித் ஷாவை கண்டித்து மீண்டும் “இந்தியா” கூட்டணி எம்.பி.,க்கள் கிளர்ச்சி யில் ஈடுபட்டனர். இதனால் மக்க ளவை, மாநிலங்களவை வெள்ளிக் கிழமை காலை வரை ஒத்தி வைக்கப்பட்டது.