india

img

ஐஐடி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 13,626 SC/ST/OBC மாணவர்கள் இடைநிற்றல்!

கடந்த 5 ஆண்டுகளில் மத்திய பல்கலைக்கழகம், ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் ஆகிய கல்வி நிறுவனங்களில் இருந்து மொத்தம் 13,626 எஸ்.சி, எஸ்.டி, ஒபிசி பிரிவை சேர்ந்த மாணவர்கள் படிப்பைப் பாதியில் விட்டுச் சென்றுள்ளதாக நாடாளுமன்றத்தில் கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஸ் சர்க்கார் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஸ் சர்க்கார் வெளியிட்ட தகவலின் அடிப்படையில்,
மத்திய பல்கலைக்கழகங்களில் இருந்து 4,596 ஓ.பி.சி மாணவர்களும், 2,424 எஸ்.சி மாணவர்களும், 2,622 எஸ்.டி மாணவர்களும் படிப்பைப் பாதியில் விட்டுச் சென்றுள்ளனர். ஐ.ஐ.டி-களில் இருந்து 2,066 ஓ.பி.சி மாணவர்களும், 1,068 எஸ்.சி மாணவர்களும், 408 எஸ்.டி மாணவர்களும் படிப்பைப் பாதியில் விட்டுச் சென்றுள்ளனர். ஐ.ஐ.எம்.,களில் இருந்து 163 ஓ.பி.சி மாணவர்களும், 188 எஸ்.சி மாணவர்களும், 91 எஸ்.டி மாணவர்களும் படிப்பைப் பாதியில் விட்டுச் சென்றுள்ளனர்.