india

img

இடஒதுக்கீட்டை பறிக்கும் சூழ்ச்சியை உடைத்தெறிந்த எதிர்க்கட்சிகள்

புதுதில்லி, ஆக. 20 - ஒன்றிய அரசின் இணை- துணைச் செயலாளர் நிலையிலான உயர் பதவிகளில், நேரடி நியமன முறை (லேட்டரல் என்ட்ரி) ரத்து செய்யப்படுவதாக நரேந்திர மோடி அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் மத்தியில் எழுந்த கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, நேரடி நியமன முறை தொடர்பான அறிவிப்பை ரத்து செய்யுமாறு யுபிஎஸ்சி தலைவர் ப்ரீத்தி சுடானுக்கு, ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் கடிதம் எழுதியுள்ளார்.

தங்களுக்கு வேண்டிய நபர் களை ஒன்றிய அரசின் உயர் பதவி களில் நியமிப்பதற்காக ‘லேட்டரல் என்ட்ரி’ (LATERAL ENTRY) என்ற திட்டத்தை கடந்த 2018-ஆம் ஆண்டு வாக்கில் நரேந்திர மோடி அரசு அறிவித்தது.

ஒன்றிய அரசின் துறைச் செய லாளர்களாக ஐஏஎஸ் அதிகாரி களை நியமிப்பதே வழக்கம். இவர் களுக்கு அடுத்த ஒன்றிய அரசுத் துறைகளின் இணைச் செய லாளர்கள், இயக்குநர்கள் மற்றும் துணைச் செயலாளர்களாகவும் ஐஏஎஸ், ஐபிஎஸ் தகுதியிலான அதிகாரிகளே நியமிக்கப்படு வார்கள். 

இவர்கள், ஒன்றிய அரசுப் பணி யாளர் தேர்வாணையமான (Union Public Service Commission - UPSC) நடத்தும் குடிமைப் பணித் தேர்வுகளில் வெற்றி பெற்று, அரசுத் துறைகளில் பல்லாண்டுகளாக - பல நிலைகளில் பணியாற்றி, அதன் பிறகே, ஒன்றிய அரசின் துறைச் செயலாளர்கள், இணை மற்றும் துணைச் செயலாளர்களாக நியமிக்கப்படுகின்றனர். நடை முறையில் இந்திய ஆட்சி நிர்வாகத்தையே நடத்துபவர்களாக இவர்கள் தான் இருக்கின்றனர்.

பாஜக அரசின் நோக்கம் என்ன?

இத்தகைய உயர்ந்த பதவிகளில் தான், ‘லேட்டரல் என்ட்ரி’ என்ற முறையை மோடி அரசு அறிமுகப் படுத்தியது. அதாவது, இந்த பதவி களில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி களை விடுத்து, தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களில் சிஇஓ-வாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்களை நியமிக்க முடிவு செய்தது.

இவர்கள் ரோஸ்டர் சர்வீஸ் முறையில் 3 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப் படுவார்கள். மேலும் தேவைப் பட்டால் 2 ஆண்டுகளுக்கு பணி நீடிப்பு வழங்கப்படும். பல கோடி ரூபாய் இவர்களுக்கு ஊதியமாக வழங்கப்படும்.

தொழில் சார் வல்லுநர்களை நியமிப்பதற்காகவே லேட்டரல் என்ட்ரி என்று பாஜக கூறிக்கொண் டாலும்,  இதன் பின்மறைமுகமான திட்டம் என்னவென்றால், ஆர்எஸ் எஸ் பேர்வழிகளை கொல்லைப்புற வழியாக அரசு நிர்வாகத்தில் நுழைப்பதே ஆகும்.

அந்த வகையில் 2018-இல் 10 இணைச் செயலாளர் பதவிகளில் ஆர்எஸ்எஸ் பேர்வழிகளை நுழைக் கும் முயற்சி நடந்தது. இதற்கு அப்போதே கடும் எதிர்ப்பு கிளம்பி யதால், தற்காலிகமாக அந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

யுபிஎஸ்சி அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு

இந்நிலையில் தான், கடந்த வாரம் ஒன்றிய அரசின் துறைகளில் 45 இணைச் செயலாளர்கள், இயக்குநர்கள் மற்றும் துணைச் செயலாளர்கள் காலியிடங்கள் நேரடி நியமனங்கள் (லேட்டரல் என்ட்ரி)  மூலம் நிரப்பப்பட உள்ளதாக யுபிஎஸ்சி மூலம் அறிவிப்பு வெளியிட்டது. 

இது மீண்டும் கடும் கொந்த ளிப்பை உருவாக்கியது.

“மோடி அரசின் இந்த அறிவிப்பு, நமது அரசியலமைப்புச் சட்டத்தைத் தகர்ப்பதற்காக ஆர்எஸ்எஸ் பேர்வழிகளை உட்புகுத்துவதற்கான அப்பட்ட மான முயற்சியாகும்” என்று குற்றம் சாட்டிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டை ஒழித்துக் கட்டி, மனு ஸ்மிருதியை நிறைவேற்ற மோடி அரசு துடிக்கிறது என்றும் சாடினார்.

இந்த ‘லேட்டரல் என்ட்ரி’ நிய மனங்கள், தலித்துக்கள், ஓபிசிகள் மற்றும் பழங்குடியினர் மீதான தாக்குதல் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்தார். 

“லேட்டரல் என்ட்ரி என்பது  சமூக நீதியின் மீது தொடுக்கப் படும் தாக்குதலாகும். தகுதிமிக்க பட்டியல் - பழங்குடி, இதர பிற் படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த அலுவலர் களுக்குரிய வாய்ப்புகளை உயர் மட்டத்தில் தட்டிப் பறிப்பதாகும்” என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். இதேபோல சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் உட்பட ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால், “இந்த நேரடி பணி  நியமனங்கள் மூலம் இடஒதுக் கீட்டு முறைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது” என்று ஒன்றிய அரசு விளக்கம் அளித்தது. 

1970-களில் காங்கிரஸ் ஆட்சி யின் போதும் இதுபோன்ற நிய மனங்கள் நடந்துள்ளன. 1976-இல் மன்மோகன் சிங், நிதிச் செயலாள ராக நியமிக்கப்பட்டதும் கூட லேட்டரல் என்ட்ரி மூலமாகத் தான் என்று சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் கூறினார்.

பாஜக கூட்டணிக்  கட்சிகளும் எதிர்ப்பு

ஆனால், இவற்றை தேசிய ஜன நாயக கூட்டணியில் இருக்கும் கட்சி களே ஏற்கத் தயாரில்லை. குறிப் பாக, நிதிஷ் குமார் தலைமை யிலான ஐக்கிய ஜனதாதளம், சிராக் பஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி உள்ளிட்ட கட்சிகளும் லேட்டரல் என்ட்ரிக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தன. அது ஒன்றிய பாஜக அரசுக்கு மேலும் நெருக்கடியாக மாறியது.

பின் வாங்கிய மோடி அரசு

இதையடுத்து, ‘ஒன்றிய அரசின் பணிகளுக்கு நேரடி நியமனம் என்ற அறிவிப்பு ரத்து’ செய்யப்படுவதாக மோடி அரசு திடீரென பின்வாங்கி யுள்ளது. இந்த நேரடி நியமன நட வடிக்கையை நிறுத்தி வைக்குமாறு யுபிஎஸ்சி தலைவர் ப்ரீத்தி சுடா னுக்கு, ஒன்றிய அமைச்சர் ஜிதேந் திர சிங் கடிதமும் எழுதியுள்ளார்.

“வேலைவாய்ப்புகளில் சமூக நீதியை நிலைநாட்ட இட ஒதுக்கீடு அவசியம்’ எனப் பிரதமர் கூறியுள்ளார்; ‘சமூக நீதியை நிலை நாட்டும் வகையில் நேரடி நியமன நடைமுறை இருக்க வேண்டும்’ என்பதிலும் பிரதமர் உறுதியாக இருக்கிறார்” என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ள ஜிதேந்திர சிங், மேலும், பிரதமர் மோடியைப் பொறுத்தவரை, வரலாற்று அநீதி களை நிவர்த்தி செய்வதற்கும், அனைத்து தரப்பினரையும் உள்ள டக்கிய சமூக நீதியை உறுதி செய்வதில் உறுதியாக இருப்ப தாகவும் கூறிக்கொண்டுள்ளார்.

ஆனால், “இந்த (ஒன்றிய அரசின் இணை, துணைச் செய லாளர்) சிறப்புப் பணியிடங் களில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வில்லை” என்பதைக் குறிப்பிட்டு, அதனாலேயே நேரடி நியமனத்தை மேற்கொண்டோம் என்பது போல சமாளித்துள்ளார். 

எனினும், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாகவே லேட்டரல் என்ட்ரி நியமனத்தை ரத்து செய்வதாக அறிவித்து மோடி அரசு பின்வாங்கியுள்ளது.