'ஒரே நாடு ஒரே தேர்தல்' தொடர்பாக வரும் 15-ஆம் தேதிக்குள் பொதுமக்கள் தங்களின் கருத்துகளை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற கருத்தினை ஒன்றிய பாஜக அரசு திட்ட மிட்டு அரசியல் களத்தில் விதைத்துள் ளது. மோடி அரசின் இந்த ஆபத்தான நகர்வுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தின. இருப்பினும் இது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தர முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் சிறப்புக் குழு ஒன்றை ஒன்றிய அரசு அமைத்திருந்தது. இந்தக் குழு மக்களவை மற்றும் சட்டசபைத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து ஆய்வு செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தக் குழுவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் கட்சியின் மக்களவை குழுத் தலைவர் ஆதிரஞ்சன் சவுத்ரி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத், திட்டக்குழுவின் முன்னாள் தலைவர் என்.கே. சிங், மக்களவையின் முன்னாள் செயலாளர் சுபாஷ் காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த சிறப்பு குழு பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டு ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமா என்பது குறித்து ஆராய்ந்து வருகிறது.
இந்த நிலையில், 'ஒரே நாடு ஒரே தேர்தல்' தொடர்பாக வரும் 15-ஆம் தேதிக்குள் பொதுமக்கள் தங்களின் கருத்துகளை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்களது ஆலோசனைகள், கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை onoe.gov.in அல்லது sc-hic@gov.in என்ற மின்னஞ்சலில் அனுப்பலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.