india

img

சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை நீட்டிப்பு!

சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான தடை பிப்ரவரி வரை நீட்டிக்கப்படுவதாக ஒன்றிய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான தடை நீட்டிக்கப்படுவதாக ஒன்றிய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து விமான போக்குவரத்து அமைச்சகம் இன்று வெளியிட்ட செய்தியில், சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்துக்கான தடை 2022 பிப்ரவரி 28ஆம் தேதி நள்ளிரவு 11.59 வரை நீட்டிக்கப்படுகிறது. அதேசமயம் விமான கட்டுப்பாட்டரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட சில சேவைகள் மட்டும் அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

;