'நியூஸ் 18 இந்தியா' செய்தி ஊடகத்திற்கு, செய்தி ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் தரநிலைகள் ஆணையம் ரூ.50,000 அபராதம் விதித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி ஒளிபரப்பாகிய கர்நாடகாவில் ஹிஜாப் தடை குறித்து நடத்தப்பட்ட விவாதத்தில் மத நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையிலான கருத்துக்களை தெரிவிக்கப்பட்டதாகவும், இஸ்லாமிய மாணவிகளை 'ஹிஜாப் கும்பல்' மற்றும் 'ஹிஜாப்வாலி கஸ்வா கும்பல்' என்று குறிப்பிட்ட நெறியாளர் அமன் சோப்ரா, மாணவிகள் திட்டமிட்டு கலவரத்தைத் தூண்டியதாக பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். மேலும், ஹிஜாப் போராட்டத்தின் பின்னணியில் ஜவாஹிரி மற்றும் பயங்கரவாத அமைப்புகள் இருப்பதாகவும் அமன் சோப்ரா தெரிவித்துள்ளார். கடந்த அக்டோபர் 21-ஆம் தேதி இது குறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில், 'நியூஸ் 18 இந்தியா' செய்தி ஊடகத்திற்கு, செய்தி ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் தரநிலைகள் ஆணையம் ரூ.50,000 அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.