india

img

ஜம்மு-காஷ்மீரில் இந்தியா கூட்டணி அமோக வெற்றி

ஹரியானாவில் தப்பிப் பிழைத்தது பாஜக!

புதுதில்லி, அக். 8 - பத்தாண்டுகளுக்குப் பிறகு நடை பெற்ற ஜம்மு - காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலில், ‘இந்தியா’ கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. 

மொத்தமுள்ள 90 தொகுதிகளில், தேசிய மாநாட்டுக் கட்சி 42 இடங்கள், காங்கிரஸ் 6 இடங்கள், மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி, ஜம்மு - காஷ்மீர் தேசிய சிறுத்தைகள் கட்சி ஆகியவை தலா ஓரிடம்- என இந்தியா கூட்டணி மொத்தமாக 50 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.

பாஜகவுக்கு 29 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. மக்கள் ஜனநாயக கட்சி 3, ஆம் ஆத்மி 1, ஜம்மு - காஷ்மீர் மக்கள் மாநாட்டுக் கட்சி 1 என இடங் களைப் பெற்றுள்ளன. சுயேட்சைகள் 7 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். 

பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்கள்

காஷ்மீர் பள்ளத்தாக்கில் இந்தியா கூட்டணியும், ஜம்மு பகுதியில் பாஜக- வும் அதிக இடங்களையும் கைப்பற்றி யுள்ளன.

ஜம்மு - காஷ்மீரில் ஆட்சியமைப்ப தற்கு 46 இடங்கள் தேவை என்ற நிலை யில், நான்கு இடங்களை கூடுதலாகவே இந்தியா கூட்டணி பெற்றுள்ளது. ஜம்மு  - காஷ்மீரில் பாஜக 25.64 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ள நிலையில், இந்தியா கூட்டணி (காங்கிரஸ் 11.97 சத விகிதம், தேசிய மாநாட்டுக் கட்சி 23.43 சதவிகிதம், ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிட்ட சிபிஎம் 0.59 சதவிகிதம், ஜேகேஎன்பிபி 1.16 சதவிகிதம்) என சுமார் 37 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது.

இந்த வெற்றி மூலம் ‘இந்தியா’ கூட்டணி ஆட்சியமைப்பது உறுதியாகி யுள்ளது.

ஜம்மு - காஷ்மீரின் அடுத்த முதல்வராக தேசிய மாநாட்டுக் கட்சி யின் துணைத் தலைவரும் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா தேர்வு செய்யப்படுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

அவர், தாம் போட்டியிட்ட கந்தர்பால், புட்காம் என இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0.81 சதவிகித வாக்குகளில் கைநழுவிய 11 தொகுதிகள்

ஜம்மு - காஷ்மீரோடு சேர்த்து தேர்தல் நடத்தப்பட்ட மற்றொரு மாநில மான ஹரியானாவில், மூன்றாவது முறையாக பாஜக வெற்றி பெற்றுள்ளது. 

இங்கு பாஜகவும் (39.91 சதவிகி தம்) காங்கிரசும் (39.10 சதவிகிதம்) ஏறக் குறைய சரிசமமான வாக்கு சதவிகி தத்தைப் பெற்றுள்ளன என்றாலும், 0.81 சதவிகித வாக்குகள் வித்தியாசத்திற் குள் 11 தொகுதிகளை பாஜக கூடுதலாக பெற்று, ஆட்சியமைக்கும் நிலையைப் பெற்றுள்ளது.

அதாவது, மொத்தமுள்ள 90 தொகு திகளில் பாஜக 48 தொகுதிகளைக் கைப் பற்றியிருக்கும் நிலையில், உச்சன காலன் தொ குதியில் வெறும் 32 வாக்கு கள், தாத்ரியில் 1957 வாக்குகள், மகேந் திரகர் தொகுதியில் 2648 வாக்குகள், ஹோடல் தொகுதியில் 2595 வாக்குகள், புந்திரி தொகுதியில் 2197 வாக்குகள், அசாந்த்தில் 2306, அடெலி 3085  என குறைந்த வாக்குகள் வித்தி யாசத்திலேயே தப்பிப் பிழைத்துள்ளது.

வாக்கு எண்ணிக்கையில் பாஜக தில்லு - முல்லு?

இதற்கு வாக்கு எண்ணிக்கையில் பாஜக அரங்கேற்றிய தில்லு-முல்லே காரணம் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. வாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிடுவதில் மிகுந்த தாமதம் காட்டப்பட்டதாகவும், இதுதொடர்பான ஆதாரங்களை தொகுத்து தேர்தல் ஆணையத்திடம் அளிக்க உள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். 

ஹரியானாவின் இந்தத் தேர்தல் முடிவுகளை ஏற்க முடியாது என்றும் காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. இதனிடையே பாஜகவின் முறைகேடுகளுக்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

 ஹரியானாவில், காங்கிரஸ் 37 தொகுதிகளை வென்றுள்ளது. இந்திய தேசிய லோக்தள் கட்சி 2 இடங்களையும், சுயேட்சைகள் 3 இடங்களையும் வென்றுள்ளன.

குல்காமில் மீண்டும் உயர்ந்த செங்கொடி

முகமது யூசுப் தாரிகாமி 5வது முறையாக வெற்றி

ஸ்ரீநகர், அக். 8- ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் முகமது யூசுப் தாரிகாமி, குல்காம் தொகுதியில் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் குல்காம் மக்கள் தொடர்ந்து ஐந்தாவது முறையாக தாரிகாமியை வெற்றி பெறச்செய்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மீதான தங்களின் நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.

1996 முதல் 2024 வரை...

தாரிகாமி முதன்முதலில் 1996-இல் குல்காமிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து, 2002, 2008, 2014 என மீண்டும் மீண்டும் குல்காம் மக்களால் தேர்வு செய்யப்பட்டார். கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பிடிபியின் நசீர் அகமது லாவை தோற்கடித்து நான்காவது முறையாக தாரிகாமி வெற்றி பெற்றிருந்தார். 2019-இல், காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபோது, அவர் பல மாதங்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். உச்ச நீதிமன்றத்தின் அனு மதியுடன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, தாரிகாமியின் வீட்டுக்குச் சென்று காஷ்மீர் மக்களின் அவல நிலையை நீதிமன்றத்தில் எடுத்துரைத்தார்.

உரிமை முழக்கத்திற்கு அங்கீகாரம்

தில்லிக்கு வந்த தாரிகாமி, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து மற்றும் மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க வேண்டும் என்று கடுமையாக வாதிட்டார். தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தின் போதும், ஒன்றிய பாஜக அரசானது, ஜம்மு - காஷ்மீருக்கு இழைத்த அநீதிகளை பட்டியலிட்டார். தேசிய மாநாட்டு கட்சியும் காங்கிரஸும் தாரிகாமியை ஆதரித்த நிலையில், தாரிகாமி 33 ஆயிரத்து 634 வாக்குகளைப் பெற்றார். அவரை அடுத்து வந்த  சுயேச்சை வேட்பாளர் ஜைர் அகமது ரஷி 25 ஆயிரத்து 796 வாக்குகளையும், பிடிபியின் முகமது அமீன் தார் 7 ஆயிரத்து 561 வாக்குகளையும் பெற்றனர்.

பாஜகவின் கள்ளக் கூட்டாளி தோல்வி

சுயேச்சை வேட்பாளர் ஜைர் அகமது ரஷி,  தடைசெய்யப்பட்ட ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பின் முன்னாள் தலைவர் ஆவார். இவருக்கு பாஜக மறைமுக ஆதரவளித்து- சுயேட்சையாக போட்டியிட வைத்தது. எனினும், ஜைர் அகமது ரஷியைப் புறந்தள்ளி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும், மக்கள் போராளியுமான முகமது யூசுப் தாரிகாமியை குல்காம் தொகுதி மக்கள், ஐந்தாவது முறையாக வாகைசூட வைத்துள்ளனர்.