india

img

40 நாட்களுக்கு மேல் தலைமறைவு : திரிணாமுல் காங்கிரசுக்கு நெருக்கடி

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஷேக் ஷாஜ ஹான், அவரது நெருங்கிய உதவி யாளர் சிவ பிரசாத் ஹஸ்ரா, உத்தம் சர்தார் ஆகிய 3 பேரும் சனியன்று முதல் 43 நாட்களாக தலைமறைவாக உள்ளனர். சந்தேஷ்காளி பாலியல் சம்பவம் காரணமாக அவர்கள் தலைமறைவாகவில்லை, ரேஷன்  மோசடி தொடர்பான அமலாக்கத் துறை தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாகவும், அமலாக்கத்துறை விசாரணைக்கு அஞ்சியும் ஜனவரி 5-ஆம் தேதி முதல் தலைமறைவாக உள்ளனர். 

இவர்கள் 3 பேரும் தலைமறை வான பின்பே சந்தேஷ்காளி பாலியல் வன்முறை விவகாரம் வெளியே கசித்துள்ளது. அதுவரை அவர்கள் பெண்களை மிரட்டி வைத்துள்ளது தெளிவாக உணரப்பட்டுள்ள நிலை யில், ஷேக் ஷாஜஹானை கைது  செய்ய மேற்கு வங்க மக்கள் மற்றும் அமலாக்கத்துறை நெருக்கடி அளித்தும் வருவதால் ஆளும் திரிணா முல் காங்கிரஸ் கட்சி இடியாப்ப சிக்கலில் சிக்கித் தவிக்கிறது.