india

img

கார்ப்பரேட்டுகளுக்காக கார்ப்பரேட்டுகளால் ஏவப்படும் அதிகாரம்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில், மாநிலங்களவையில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் ஏ.ஏ.ரஹீம் ஆற்றிய முதல் உரையின் பகுதிகள்...

நாராயண குருவின் மதச்சார்பின்மையும் மனிதநேயமும்
இந்தியா, ஒரு மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசு என்பதை மீண்டும் மீண்டும் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். இந்தியா போன்ற ஒரு மதச்சார்பற்ற நாட்டில் ஓர் அரசாங்கம் ராமர் கோவிலில் சிலையைத் திறப்பதை ஒரு மாபெரும் சாதனை என்று எப்படிக் கூற முடியும்?

இந்தக் குறிப்பிட்ட பின்னணியில்தான், 1888ஆம் ஆண்டில் என்னுடைய சொந்த மாவட்டமான திருவனந்தபுரத்தில், ஸ்ரீ நாரா யணகுருவினால் அமைக்கப்பட்ட ‘சிவ பிரதிஷ்டா’வை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். சிவ பிரதிஷ்டாவை அமைத்த பிறகு அதன்கீழ் மதச்சார்பின்மை மற்றும் மனித நேயம் என்னும் சொற்களைப் பொறித்துள் ளார்.

அதேசமயத்தில், இங்கே ‘பிராணபிரதிஷ்டா’ நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருக்கும் சம யத்தில், மத்தியப் பிரதேசத்தில் மூன்று கிறித்தவ தேவாலயங்கள் தாக்கப்பட்டிருக்கின்றன. இந்தத் தாக்குதல் மூலமாக என்ன செய்தியைக் கூற விரும்புகிறீர்கள்? இந்த அரசாங்கம் மக்க ளைப் பிளவுபடுத்த முயற்சித்துக் கொண்டிருக் கிறது. பிளவுவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்திடுங்கள். சாமானிய மக்களின் அவ லங்கள் குறித்துப் பேசுங்கள். பணவீக்கம் குறித்துப் பேச வாருங்கள். யானை போல் இருந்திடும் வேலையில்லாத் திண்டாட்டம் குறித்துப் பேச வாருங்கள்.

எதார்த்தத்துக்கு  சம்பந்தமில்லாத உரை
குடியரசுத் தலைவரின் உரை என்பது நாட்டி லுள்ள சமூக எதார்த்தத்திற்கு எவ்விதத்திலும் சம்பந்தம் இல்லாது, வெற்று சங்கதிகள் நிரம்பியதும், புள்ளிவிவரங்களைப் பூதாகர மாக்கியதுமான உரையேதவிர வேறல்ல. இன்று நாட்டின் நிலை என்ன என்பது குறித்தும், எதிர்காலத்தில் என்ன செய்யப்போகிறோம் என்பது குறித்தும் குடியரசுத் தலைவர் உரை யில் குறிப்பிட்டிருக்க வேண்டும். ஆனால், இவ்வாறு எதுவும் குடியரசுத் தலைவர் உரை யில் இல்லை. 31 பக்கங்கள் உள்ள குடியரசுத் தலைவர் உரையில் “வேலையில்லாத் திண்டாட்டம்” குறித்து ஒரு வார்த்தைகூட இல்லை. வேலையின்மை நிலை இன்று நாட்டில் எப்படி இருக்கிறது? சென்ற அக்டோ பரில் வேலையின்மை விகிதம் 10.09 விழுக்காடு உயர்ந்திருக்கிறது. இது இந்தியப் பொருளா தாரத்தைக் கண்காணிக்கும் மையம் வெளி யிட்டுள்ள தரவாகும். படித்த இளைஞர்கள், வேலைகளுக்காக “சந்தை”யில் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

சென்ற ஆண்டு, அரசாங்கம் லட்சக் கணக்கான இளைஞர்களுக்கு அரசு உத்தியோ கத்தை அளித்ததாகக் கூறியிருக்கிறது. இவர்கள் ‘ரோஜ்கர் மேளா’ (Rozgar Mela) குறித்து கூறுகிறார்கள் எனக் கருதுகிறேன். ரோஜ்கர் மேளா என்பது மக்களின் கண்களில் மண்ணை அள்ளிப்போடும் தந்திரம் என்று அரசாங்கமே ஒப்புக்கொள்ளவில்லையா? 

மூன்று மிகப்பெரும் தீமைகள்
இதுதொடர்பாக என்னுடைய அனு பவத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். ‘ரோஜ்கர் மேளா’ குறித்து இந்த அவையில் நான் கேட்டி ருந்த கேள்வி ஒன்றுக்கு, பிரதமர் அலுவல கத்தைச் சேர்ந்த அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், அளித்துள்ள எழுத்துப்பூர்வமான பதிலில், ரோஜ்கர் மேளா மூலமாக ஓர் இடம் கூட புதி தாக உருவாக்கப்படவில்லை என்று கூறியிருக் கிறார். காலியாக உள்ள இடங்களுக்குத்தான் நியமனங்கள் செய்யப்பட்டிருக்கின்றன என்றும் கூறினார். இதுவே எதார்த்த நிலை யாகும். ஒன்றிய அரசாங்கத்தின் பல்வேறு துறைகளில் லட்சக்கணக்கான பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. வேலையின்மை, தகுதிக்குக் குறைவான வேலை அல்லது குறைந்த சம்பளத்தில் வேலை மற்றும் ஒப்பந்த அடிப்படையில் வேலை என்பதே இன்று நாட்டின் இளைஞர்கள் எதிர்கொண்டுவரும் மூன்று மிகப்பெரும் தீமைகள் ஆகும். 

இந்திய வேலைவாய்ப்புத்துறையில் ஒப்பந்த அடிப்படையிலான வேலைக்கு மிகச் சரியான எடுத்துக்காட்டு அக்னிபாத் திட்டம் ஆகும். ராணுவத்திற்கு தேர்ந்தெடுக்கப்படு பவர்களைக் கூட ஒப்பந்த அடிப்படையில் எடுக்கத் தொடங்கிவிட்டார்கள். நிரந்தர நிய மனங்களுக்குப் பதிலாக அரசாங்கமானது வங்கிகளிலும், இன்சூரன்ஸ் நிறுவனங்களி லும், ரயில்வேயிலும் மற்றும் பல பொதுத்துறை நிறுவனங்களிலும் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை நியமித்துக்கொண்டிருக்கிறது.

இளைஞர்களுக்கு இருண்ட காலம்
நரேந்திர மோடி அரசாங்கம் புதிய வேலை கள் எதையும் உருவாக்கப்போவதில்லை. நிரந்தரப் பணியிடங்களை நிரப்பும் எண்ணமே அதற்குக் கிடையாது. இந்த அர சாங்கம், இந்திய இளைஞர்களுக்கு “பொற்  காலம்” (“Amrit Kaal”)  அல்ல. மாறாக இது அவர்களுக்கு ஓர் “இருண்ட காலம்” (“Mrit kaal”) ஆகும். ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு ஆள் எடுப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் இளைஞர்களுக்கு நிரந்தரப் பணியிடங்களை உத்தரவாதப்படுத்திட வேண்டும் என்றும் அரசாங்கத்தை வலி யுறுத்துகிறேன்.

இப்போது கிக் கம்பெனிகள் (gig compa nies) வந்திருக்கின்றன. வேலைதேடி அலையும் இளைஞர்களை இந்த கிக் கம்பெனிகள் பயன் படுத்திக் கொள்கின்றன. நன்கு படித்த வேலை யில்லா இளைஞர்களை, ஸ்விக்கி, சொமாட்டோ, உபேர்  போன்ற கம்பெனிகள் அற்ப ஊதியம் அளித்து வேலை வாங்கிக் கொண்டிருக்கின்றன. அவர்கள் மழை, வெயில், குளிர் என்று பாராது வீதி வீதியாகச் சென்று அல்லும் பகலும் அயராது உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் நலன்களைக் காத்திட எந்தத் திட்டமும்  கிடை யாது. இந்த கிக் கம்பெனி ஊழியர்கள் குறித்து  ஒரு வார்த்தை கூட குடியரசுத் தலைவர் உரை யில் இல்லை. எனவே இது அவர்களுக்குப் பொற்காலம் இல்லை.  இது அவர்களுக்கு ஓர் இருண்ட காலமேயாகும்.

விலை உயர்வை கட்டுப்படுத்துவதில் தோல்வி
நாட்டில் பணவீக்கம் அதிவேகமாக அதி கரித்து வருகிறது. தேசிய மாதிரி சர்வேயின் அறிக்கையின்படி இந்தியாவில் சில்லரை பணவீக்கம் 5.69 விழுக்காடாக அதிகரித்துள் ளது. மேலும் பணவீக்கம், நகரங்களைக் காட்டி லும் கிராமங்களில் அதிகமாக இருக்கிறது. இது காய்கறிகள் மற்றும் உணவுப் பொருள்களின் விலைகள் உட்பட அத்தியாவசியப் பொருட் களின் விலைகளின் உயர்வுக்கு இட்டுச் சென்றிருக்கிறது. ஒன்றிய அரசாங்கம், அத்தி யாவசியப் பொருள்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்திட முற்றிலுமாகத் தோல்வி அடைந்துள்ளது.

ஏழைகள் மேலும் ஏழைகளாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். உலகப் பசி-பட்டினி அட்டவணையில் இந்தியா 111ஆவது இடத்தைப் பெற்றிருக்கக்கூடிய இந்தத்தருணத்தில்தான் இதைப் ‘பொற்காலம்’ என்று இந்த அரசாங்கம் கூறிக்கொண்டிருக்கிறது.

சாமானிய மக்களுக்கு  இருண்ட காலம்
விலைவாசி உயர்வு என்ன நிலை? பெட்ரோல் லிட்டர் 97 ரூபாய். ஐமுகூ ஆட்சிக்காலத்தில் இங்கே அமைச்சராக  வீற்றி ருக்கும் வி.முரளீதரன், கேரளாவின் தலை நகரில் இதற்கு எதிராக மாட்டு வண்டி கிளர்ச்சி நடத்தினார். இப்போது அவர்கள் ஆட்சியில் டீசலுக்குக் கூட கட்டுப்பாட்டை நீக்கிவிட்டார்கள். பட்ஜெட் நாளான இன்றைக்குக்கூட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 15 ரூபாய் அதிக மாக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு சாமானிய மக்களின் நடைமுறைச் செலவினங்கள் நாளுக்கு நாள் விண்ணை நோக்கி சென்று  கொண்டிருக்கிறது. இது சாமானிய மக்க ளுக்குப் பொற்காலம் கிடையாது. இது அவர் களுக்கு இருண்ட காலம் ஆகும்.

விமானக் கட்டணங்களுக்கு வருகிறேன். பெட்ரோல், டீசல் போல, விமானக் கட்டணம் குறித்தும் 56 அங்குல அரசாங்கத்திற்கு எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. சாமானிய மக்களின் வாழ்க்கையைப் பாதிக்கும் எதையும் கட்டுப்படுத்த இவர்களால் முடியவில்லை.

சுருக்கமாகச் சொல்வதென்றால், இந்திய ஜனநாயகம் என்பது மக்களின், மக்களால், மக்களுக்காக என்பதை இவர்கள் இந்திய ஜனநாயகம் என்பது கார்ப்பரேட்டுகளின், கார்ப்பரேட்டுகளால், கார்ப்பரேட்டுகளுக்காக என்று மாற்றி எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு ஏ.ஏ.ரஹிம் பேசினார்.

- தமிழில்: ச.வீரமணி