புதுதில்லி, ஜூன் 24 - 18-ஆவது நாடாளுமன்ற மக்களவை யின் முதல் கூட்டத் தொடர் திங்கட்கிழமை யன்று தொடங்கியது.
ஜூலை 3 வரை கூட்டத் தொடர் நடைபெற வுள்ள நிலையில், முதல் இரண்டு நாட்க ளில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் பதவியேற்றுக் கொள்வார்கள்; குறிப்பாக, ஜூன் 24 அன்று 280 எம்.பி.க் களும், ஜூன் 25 அன்று 260 எம்.பி.க்களும் பதவியேற்பார்கள்; அவர்களுக்கு இடைக் கால சபாநாயகர் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
முதலில் பதவியேற்ற இடைக்கால சபாநாயகர்
அதன்படி, 18-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் துவங்குவதற்கு முன் னதாக, குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இடைக்கால சபா நாயகராக- ஒடிசாவைச் சேர்ந்த பாஜக எம்.பி. பர்த்ருஹரி மஹதாப்புக்கு, குடிய ரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிர மாணம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் புறக்கணிப்பு
ஆனால், பர்த்ருஹரி மஹதாப்பை இடைக்கால சபாநாயகராக நியமித்ததன் மூலம் 18-ஆவது மக்களவையின் முதல் நாளிலேயே, மோடி அரசானது, அரசியல மைப்புச் சட்டத்தை மீறி விட்டதாக குற்றம் சாட்டி, பர்த்ருஹரி மஹதாப்பின் பதவி யேற்பு நிகழ்ச்சியையே காங்கிரஸ் உள் ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் புறக்க ணித்தன.
அத்துடன், பர்த்ருஹரி மஹதாப் நிய மிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடா ளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிகமுறை மக்களவைக்கு தேர்ந்தெ டுக்கப்பட்ட நபரையே இடைக்கால சபா நாயகராக நியமிக்க வேண்டும் என்பது நாடாளுமன்ற அவையின் விதியாகும். அதன்படி கேரளத்தைச் சேர்ந்த காங்கி ரஸ் எம்.பி. கொடிக்குன்னில் சுரேஷ் 8 முறை எம்.பி.யானவர் என்ற அடிப்படையில், அவ ரையே நியமித்திருக்க வேண்டும். ஆனால், 7 முறை எம்.பி.யான ஒடிசாவை சேர்ந்த பாஜக எம்.பி. பர்த்ருஹரி மஹதாபை இடைக்கால சபாநாயகராக குடியரசுத் தலைவர் நியமித்தார். இதற்கு எதிர்ப்பு தெரி வித்தே ‘இந்தியா’ கூட்டணியினர் பர்த்ரு ஹரி மஹதாபின் பதவியேற்பை புறக்க ணித்தனர்.
‘துணை’ பதவிகளையும் நிராகரித்த ‘இந்தியா’ கூட்டணி
புதிய எம்.பி.க்கள் பதவியேற்பின் போது, இடைக்கால சபாநாயகர் பர்த்ரு ஹரி மஹதாபுக்கு காங்கிரஸ் தலைவர் கொடிக்குன்னில் சுரேஷ், திமுக தலைவர் டி.ஆர். பாலு, பாஜக உறுப்பினர்கள் ராதா மோகன் சிங் மற்றும் பக்கன் சிங் குலாஸ்தே, திரிணாமுல் தலைவர் சுதீப் பந்தோபாத்யாய் ஆகியோர் அடங்கிய குழுவினர் உதவுவார்கள்- அதாவது இடைக் கால துணை சபாநாயகர்களாக செயல்படு வார்கள் என நாடாளுமன்ற விவகாரங்க ளுக்கான அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரி வித்திருந்தார்.
ஆனால், இந்த இடைக்கால துணை சபாநாயகர் பொறுப்புகளையும் நிரா கரித்த காங்கிரஸ், திமுக உள்ளிட்ட ‘இந் தியா’ கூட்டணி கட்சித் தலைவர்கள், இது தொடர்பாக மக்களவைச் செயலகத்திற்கு கடிதங்களையும் அனுப்பி வைத்தனர். இடைக்கால உதவி சபாநாயகர் இருக்கை யில் நாங்கள் அமர மாட்டோம் என்றும் அந்தக் கடிதங்களில் தெரிவித்திருந்தனர்.
இந்த எதிர்ப்புக்கள் அனைத்தையும் மீறியே பாஜக எம்.பி. பர்த்ருஹரி மஹ தாபை இடைக்கால சபாநாயகராக குடி யரசுத் தலைவர் நியமித்தார்.
கிரண் ரிஜிஜூவின் மோசடியான விளக்கம்
இதுதொடர்பாக எழுந்த கேள்விக்கு பர்த்ருஹரி மஹதாப் தோல்வியே அடை யாமல் தொடர்ந்து ஏழு முறை நாடாளு மன்றத்திற்கு தேர்வாகி உள்ளதாகவும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கொடிக் குன்னில் சுரேஷ் 8 முறை எம்.பி. என்றா லும், அவர் 1998 மற்றும் 2004 மக்களவைத் தேர்தல்களில் தோற்றுள்ளார் என்று புதிய மோசடியான ஒரு விளக்கத்தை நாடாளு மன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்தார்.
பர்த்ருஹரி மஹதாப் தோல்வியே அடையாமல் தொடர்ந்து ஏழு முறை வெற்றி பெற்றவர் என்று கிரண் ரிஜிஜூ கூறி யுள்ளார். இந்த 7 முறையில் 6 முறை பிஜூ ஜனதாதளம் கட்சியின் சார்பிலேயே எம்.பி. யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவ்வாறு செல்வாக்கு படைத்த பர்த்ருஹரி மஹ தாப்பை தங்கள் பக்கம் இழுத்து, தற்போது 7-ஆவது முறையில் பாஜக எம்.பி. ஆக்கி யுள்ளனர் என்பது தனிக்கதை.
முதல் நாளிலேயே எம்.பி.க்கள் போராட்டம்
எனவே, 8 முறை வென்றவரை இடைக் கால சபாநாயகராக நியமிக்காதது, அரசி யலமைப்பு விதி மீறல் என்று குற்றம் சாட்டிய காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக, சமாஜ் வாதி, ராஷ்ட்ரிய ஜனதாதளம், திரிணா முல் காங்கிரஸ் உள்ளிட்ட ‘இந்தியா’ கூட்ட ணியைச் சேர்ந்த எம்.பி.க்கள் நாடாளு மன்ற வளாகத்தில் அரசியல் சாசன புத்த கத்தை கைகளில் ஏந்தியவாறு ஆர்ப்பாட் டம் நடத்தினர்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, திமுக எம்.பி.க்கள் டி.ஆர். பாலு, கனிமொழி, இடதுசாரிக் கட்சி எம்.பி. க்கள் கே. ராதாகிருஷ்ணன், சு. வெங்க டேசன், ஆர். சச்சிதானந்தம், சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், டிம்பிள் யாதவ், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் சுதீப் பந்தோபாத்யாய, சவு கதா ராய், கல்யாண் பானர்ஜி உள்ளிட்ட ஏரா ளமான எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.
‘அரசியல் சாசனத்தைப் பாது காப்போம்’; ‘அரசியல் சாசனம் வாழ்க!’ என்று முழக்கங்களையும் அவர்கள் எழுப்பி னர். பதவியேற்பு நாளிலேயே எதிர்க்கட்சி எம்.பி.க்கள், அரசியல் சாசனத்தை முன் வைத்து நடத்திய இந்த போராட்டங்களால் நாடாளுமன்ற வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.
அரசியல் சாசனத்தை ஏந்தியபடி பதவியேற்பு
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “அரசியல் சாச னத்துக்கு எதிராக மோடியும், அமித் ஷா வும் தாக்குதல் நடத்துவதை எங்களால் ஏற்க முடியாது. அது நிகழ நாங்கள் விட மாட்டோம். நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கும்போது அரசியல் சாசன புத்தகத்தை கைகளில் ஏந்தியபடிதான் பதவியேற்போம். எந்த ஒரு சக்தியும் இந்திய அரசியல் சாசனத்தை தொட முடி யாது என்ற எங்களின் செய்தி நாடு முழு வதும் சென்றடைந்து கொண்டிருக்கிறது” எனக் கூறினார்.
அதன்படியே, இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் ஒவ்வொருவர் பதவியேற்ற போதும், அரசியல் சாசனத்தைக் கையில் ஏந்தியபடியே எம்.பி.க்களாக பதவி யேற்றுக் கொண்டனர்.
இன்றும் பதவியேற்பு தொடர்கிறது
இந்நிலையில், செவ்வாயன்றும் எம்.பிக்கள் பதவியேற்பு விழா நடைபெறு கிறது. ஜூன் 26 அன்று மக்களவை சபா நாயகர் தேர்தல் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து, மாநிலங்களவை மற்றும் மக்களவை ஆகிய இரண்டு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜூன் 27 அன்று குடி யரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரை யாற்றுகிறார். ஜூலை 3 வரை கூட்டத் தொடர் நடைபெறுகிறது.
டிராக்டரில் வந்த மார்க்சிஸ்ட் கட்சி எம்.பி.
மூன்று வேளாண் சட்டங்கள் மற்றும் குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லி எல்லையில் இரண்டு கட்டமாக விவ சாயிகளின் நாடாளுமன்ற முற்றுகை முயற்சி போராட்டங்கள் நடைபெற்றன. ஆனால் தில்லியில் நுழைய முயன்ற விவசாயிகளை வன்முறைக்காரர்கள் போல மோடி அரசு தாக்குதல் சம்பவங்கள் மூலம் தடுத்தது. இந்நிலையில், நாடாளுமன்றத்துக்கு டிராக் டர்களில் செல்லும் போராட்ட முயற்சிக்கு உரமூட்டும் வகையிலும், மோடி அரசுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் ராஜஸ் தானின் சிகார் மக்களவை தொகுதியில் வெற்றி பெற்றிருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி எம்.பி. அம்ரா ராம், நாடாளு மன்றத்துக்கு டிராக்டரில் சென்று அசத்தி யுள்ளார்.