இந்தியாவை அதிவேக தொழில் மய நாடாக மாற்றிவிட்டோம் என்று மார்தட்டிக்கொள்கி றார் மோடி. ஆனால் கடந்த 4 ஆண்டுகளில் இந்தியாவின் விவசாய நிலங்களில் வேளாண் கூலித் தொழிலாளிகளின் எண்ணிக்கை 6 கோடி அளவிற்கு அதிகரித்துள்ளது என்று வால் ஸ்டிரீட் ஜர்னல் தெரிவிக்கிறது. மோடினாமிக்ஸ் எனப்படும் மோசடி பொருளாதார கொள்கையானது வேலை யற்ற வளர்ச்சியை உருவாக்கியுள்ளது. மோடியின் கூட்டுக்களவாணிகளுக்கு மெகா லாபங்களை பரிசாக வாரிவழங்கியுள்ளது. இதன் விளைவு, இந்தியா தொழில் மய சூழலிலிருந்து விலகி நிற்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு தொழில் உற்பத்தி துறையின் பங்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 17 சதவீதமாக இருந்தது, 2022 ல் 13 சதவீதமாக வீழ்ந்துள்ளது. இதுதான் மோடி ஆட்சி கூறுகிற தொழில் வளர்ச்சியின் லட்சணம்.