புதுதில்லி, பிப்.15- ஒன்றிய பட்ஜெட் மீது நாடாளுமன்ற மக்களவையில் நடைபெற்ற விவா தத்தில் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவ ருமான கே.நவாஸ்கனி பேசினார். அவர் பேசியது வருமாறு: நிதியமைச்சர் நிதிநிலை அறிக்கை யை வாசிக்கும் பொழுது ஒரு பெரும் வளர்ச்சி, பெரும் சாதனை என்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயன்றார்கள். ஆனால் நீங்கள் காட் டிய அந்த வளர்ச்சி அந்த தோற்றம் எல்லாம் மதுரையில் தந்த எய்ம்ஸ் மருத்துவமனையை போல வெற்றிட மாக மட்டுமே உள்ளது. இந்த நிதி நிலை அறிக்கை ஏழை எளிய நடுத்தர வர்க்க மக்களை பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்துகிற அறிக்கையாகவே பார்க்க முடிகிறது. பணக்காரர்கள் மேலும் பணக்கா ரர்களாக ஆகிக்கொண்டே செல்கிறார் கள். ஏழைகள் மேலும் ஏழைகளாக ஆகிக்கொண்டே செல்கிறார்கள். இது தான் கடந்த 8 ஆண்டு கால சாதனை. இந்த அரசு சிறுபான்மை மக்களை தொடர்ந்து வஞ்சிக்கக்கூடிய அரசு என் பதை வழக்கம்போல இந்த பட்ஜட்டி லும் நிரூபித்து விட்டது. சிறுபான்மை மக்கள் மட்டுமல்ல எஸ்சி, எஸ் டி, ஓ பி சி என இதர சமூக மக்களுக்கான திட்டங்கள் பலவற்றுக்கு நிதியை குறைத்து அவர்களுக்கு துரோ கம் இழைக்கும் பட்ஜெட் ஆகவும் இந்த பட்ஜெட் அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டிற்கு எந்தவித புதிய திட்ட அறிவிப்பும் இன்றி எங்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்திருக்கிறது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. பார பட்சமாய் தமிழ்நாட்டிற்கு நீங்கள் செய் யும் அநீதிக்கு தமிழ்நாட்டு மக்கள் உங்க ளுக்கு தொடர்ந்து பாடம் புகட்டு வார்கள், புகட்டி வருகிறார்கள். சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவ னங்கள்தான் இன்று நாட்டில் அதிக மான வேலை வாய்ப்பை வழங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால் அவற் றின் மேம்பாட்டிற்கு 15 சதவீதத்திற்கு மேல் ஜிஎஸ்டி வரி கூடாது என்று தொட ர்ந்து முன்வைக்கப்பட்ட கோரிக்கை யை இந்த அரசு நிறைவேற்ற மறுக்கி றது. சிறு குறு நடுத்தர தொழில்களுக்கு கடன் வழங்க ஒன்பது கோடி ரூபாய மட்டுமே ஒதுக்கீடு செய்திருக்கிறீர்கள். இவ்வளவு பெரிய மக்கள் தொகை கொண்ட நாட்டில் சிறுகுறுதொழில் களுக்கு நீங்கள் வழங்கும் முக்கியத்து வம் இதுதான் என்பது மிகப்பெரிய கவலை அளிக்கிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிதியை ரூ.80 ஆயி ரம் கோடியில் இருந்து ரூ.60 ஆயி ரம் கோடியாக, 20 ஆயிரம் கோடி குறைத்திருப்பது என்பது அந்தத் திட் டத்தை குழி தோண்டி புதைக்கக்கூடிய செயலாக இருக்கும். அதனை மறுபரி சீலனை செய்ய வேண்டும். சிறுபான்மை மக்களை வஞ்சிக்கும் இந்த அரசின் போக்கு இந்த நிதிநிலை அறிக்கையிலும் பிரதிபலிக்கிறது. சிறுபான்மை நலத்துறைக்கு கடந்த ஆண்டு 5020 கோடி ஒதுக்கப்பட்டிருந் தது ஆனால் இந்த ஆண்டு 3097 கோடி யாக குறைக்கப்பட்டுள்ளது. கிட்டத் தட்ட 2 ஆயிரம் கோடி ரூபாய் நிதி குறைக்கப்பட்டிருக்கிறது. சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்படும் பிரீ மெட்ரிக் ஸ்காலர் ஷிப் காண நிதி சுமார் ஆயிரம் கோடி குறைக்கப்பட்டு இருக்கிறது. சிறுபான்மை ஆராய்ச்சி மாண வர்களுக்கு வழங்கப்படும் மௌலானா அபுல் கலாம் ஆசாத் தேசிய கல்வி ஆராய்ச்சி உதவித்தொகை முற்றிலு மாக நிறுத்தப்பட்டிருக்கிறது. சிறு பான்மை மாணவர்கள் ஆராய்ச்சி கல்வி கற்பதை தடுக்க கூடிய அரசாக இந்த அரசு இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.