india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

தில்லியில் அமைச்சர்கள் கைது
கெஜ்ரிவால் கைதை கண்டித்து தில்லி மற்றும் மகாராஷ்டிரா, ஹரியானாவில்  நள்ளிரவு முதலே ஆம் ஆத்மி தொண்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வெள்ளியன்று தில்லியில் ஆம் ஆத்மி தலைமை அலுவலகம் அருகே அக்கட்சியின் எம்எல்ஏக்கள், எம்பிக்கள், மாநில அமைச்சர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் கெஜ்ரிவால் கைதுக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து தில்லி அமலாக்கத்துறை அலுவலகத்தை நோக்கி பேரணி செல்ல முயன்ற பொழுது, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரடி கட்டுப்பாட்டில் உள்ள தில்லி காவல்துறை போராட்டக் களத்தில் உள்ள அனைவரையும் கைது செய்தது. முக்கியமாக தில்லி நிதியமைச்சர் அதிஷி, சுகாதாரத்துறை அமைச்சர் பரத்வாஜ் ஆகியோர் வலுக்கட்டாயமாக தரதரவென இழுத்துச் செல்லப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

தில்லியில் மட்டுமின்றி தமிழ்நாடு தலைநகர் சென்னை, ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர், ஹரியானா, பஞ்சாப், குஜராத், கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் கெஜ்ரிவால் கைதை கண்டித்து “இந்தியா” கூட்டணிக் கட்சிகள் போராட்டம் நடத்தின.

வீட்டுக்காவலில் கெஜ்ரிவால் குடும்பத்தினர்
கெஜ்ரிவால் வியாழனன்று இரவு அமலாக்கத்துறையால் கைது செய்யப் பட்ட பின்பு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வெள்ளியன்று மதியத்திற்கு மேல் கெஜ்ரிவாலின் குடும்பத்தினரை சந்திக்க உள்ளதாக அறிவித்தார். இதன்பிறகு கெஜ்ரிவால் இல்லம் போலீசா ரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டதாக தகவல் வெளி யாகியது. இதனை அறிந்த தில்லி அமைச்சர் கோபால்ராய் கெஜ்ரிவால் வீட்டிற்கு சென்றார். அங்கு அவரை போலீசார் அனுமதிக்கவில்லை. அதன்பிறகே கெஜ்ரிவால் இல்லம் போலீசாரின் கட்டுப்பாட்டில் மட்டும் இல்லை என்றும், குடும்பத் தினரை தில்லி காவல்துறை வீட்டுக்காவலில் வைத்துள்ளது என்றும் தெரியவந்தது. ராகுல் காந்தி கெஜ்ரிவால் குடும்பத்தி னரை சந்திக்க விடக் கூடாது என்பதற்காகவே அவரது குடும்பத்தினர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

“மோடி அரசின் 
சவப்பெட்டியின் கடைசி ஆணி”

அரியணையில் அமர் ந்திருக்கும் சர்வாதி காரி மோடி ஒரு கோழை. அவர் நாட்டின் அரசாங்க நிறு வனங்களை தவறாகப் பயன்படுத்துகிறார். கெஜ்ரி வால் விரைவில் கைது செய்யப்படுவார் என நான் 10 மாதங்களுக்கு முன்பே கூறினேன். சொன்னது போலவே தற்போது தில்லி முதல்வர்அரவிந்த் கெஜ்ரி வாலை கைது செய்ததன் மூலம் மோடி அரசு தனது சவப்பெட்டியில் கடைசி ஆணியை அடித்துள்ளது என முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவரு மான சத்யபால்மாலிக் தனது டுவிட்டர்எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளார்.

தில்லியில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு ஆபத்து இல்லை
கெஜ்ரிவால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் “ஆப்ரேசன் லோட்டஸ்” மூல மும், ஆளுநர் மூலம் நிர்வாகத்தில் குழப்பம் ஏற்படுத்தியும் தில்லியில் ஆட்சியை கைப்பற்ற பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளது. கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டாலும், அவர் சிறையில் இருந்து கொண்டு நிர்வாகத்தை கவனிப்பார் என ஆம் ஆத்மி மூத்த தலைவரும், நிதியமைச்சருமான அதிஷி கூறியுள்ளார். கெஜ்ரிவால் கைதால் தில்லி ஆம் ஆத்மி ஆட்சிக்கு எவ்வித ஆபத்தும் இல்லை. காரணம் நிதியமைச்சர் அதிஷி, சுகாதாரத்துறை அமைச்சர் சவுரப் பரத்வாஜ், சுற்றுச் சூழல்துறை அமைச்சர் கோபால் ராய் ஆகியோர் கெஜ்ரிவா லுக்கு இணையாக நிர்வாகத்தை கவனிக்க தகுதி உடையவர்க ளாக உள்ளனர். இதனால் தில்லியில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கவிதாவுக்கு ஜாமீன் மறுப்பு
கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ள அதே மதுபானக் கொள்கை முறைகேடு தொ டர்பாக தெலுங்கானா முன்னாள் முதல் வர் சந்திரசேகர ராவின் மகளும், பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சி எம்எல்சியுமான கே.கவிதா அமலாக் கத்துறையாகல் கடந்த வெள்ளியன்று கைது செய்யப்பட்டார். அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டதை எதிர்த்தும் ஜாமீன் கோரியும் உச்சநீதி மன்றத்தில் கவிதா மீண்டும் மனு தாக்கல் செய்தார்.விசாரணை நீதிமன்றத்தை நாடுங்கள்  எனக் கூறி கவிதாவின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.சந்தேகங்கள் கிளம்பியுள்ளன.

தில்லியில் 144 தடை 
பாஜக அலுவலகங்களில் துணை ராணுவப்படை குவிப்பு

கெஜ்ரிவால் கைது காரணமாக தில்லியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஆம் ஆத்மி தலைவர்கள், தொண்டர்கள் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆம் ஆத்மி கட்சியின் போராட்டத்தில் “இந்தியா” கூட்டணிக் கட்சிகளும், பொதுமக்களும் பங்கேற்று வருவதால் மிரண்டு போயுள்ள மோடி அரசு, தங்களது பாஜக அலுவலகத்திற்கு துணை ராணுவப்படை பாது காப்பை ஏற்படுத்தியுள்ளது. தில்லியின் முக்கியப் பகுதிக ளில், உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் நேரடி கட்டுப்பாட் டில் உள்ள தில்லி காவல்துறை 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

சாலைகள், மெட்ரோ மூடல்
பதற்றம் நீடிப்பதால் ஐடிஒ சவுக், ராஜ்காட் மற்றும் விகாஸ் மார்க் சாலைகளை போலீசார் முற்றிலுமாக மூடிவிட்டனர். இதே போல தில்லி லோக் கல்யாண் மார்க் மெட்ரோ வெள்ளியன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மூடப்பட்டது.

கவிதாவுக்கு ஜாமீன் மறுப்பு
கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ள அதே மதுபானக் கொள்கை முறைகேடு தொ டர்பாக தெலுங்கானா முன்னாள் முதல் வர் சந்திரசேகர ராவின் மகளும், பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சி எம்எல்சியுமான கே.கவிதா அமலாக் கத்துறையாகல் கடந்த வெள்ளியன்று கைது செய்யப்பட்டார். அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டதை எதிர்த்தும் ஜாமீன் கோரியும் உச்சநீதி மன்றத்தில் கவிதா மீண்டும் மனு தாக்கல் செய்தார்.விசாரணை நீதிமன்றத்தை நாடுங்கள்  எனக் கூறி கவிதாவின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.சந்தேகங்கள் கிளம்பியுள்ளன.

‘மக்கள் எழுச்சி வெடிக்கும்’
முதல்வர்களை சிறைக்கு அனுப்புவதும், ஊடகங்களை கட்டுப்படுத்துவதும் மோடி அரசுக்கு ஒருபோதும்  உதவாது. ஏனெனில் இவையெல்லாம் ஜனநாய கத்தை பலவீனப்படுத்தும் செயல்கள் ஆகும். பாஜகவால் எதிர்க்கட்சித் தலைவர்களை சிறையில் அடைக்க முடியும். ஆனால் பொதுமக்களை சிறைக்கு அனுப்ப முடியாது. அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது ஒரு புதிய மக்கள் புரட்சியை உருவாக்கும் என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையத்திடம் “இந்தியா” கூட்டணி புகார்
தேர்தல் நடத்தை விதிகள் அம லுக்கு வந்துள்ள நிலையில் எதிர்க்கட்சித் தலைவர்களை ஒடுக்கும் முனைப்பில் மோடி அரசு மத்திய அமைப்புகள் மூலம் நெருக்கடி அளித்து வருகிறது. ஹேமந்த் சோரன் வரிசையில் தற்போது தில்லி முதல்வர் கெஜ்ரிவாலை அம லாக்கத்துறை கைது செய்துள்ள நிலையில், இதனை கண்டித்து “இந்தியா” கூட்டணிக் கட்சிகள் தேர் தல் ஆணையத்திடம் நேரில் புகார் அளித்துள்ளன. தேர்தல் ஆணை யத்திடம் புகார் அளிக்கும் நிகழ்வில் காங்கிரஸ் சார்பில் கே.சி.வேணு கோபால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, திமுக சார்பில் வில்சன், திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் டெரைக் ஓ பிரையன் ஆகியோர் பங்கேற்றனர்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள சூழலில், விதி முறைகளை மீறி அரவிந்த் கெஜ்ரி வால் கைது செய்யப்பட்டுள்ளார். அரசு மற்றும் காவல்துறை நிர்வாகங்கள் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட் டில் உள்ளது. அந்த கட்டுப்பாடுகள் மத்திய அமைப்புகளின் மீது மட்டும் ஏன் இல்லை? என தேர்தல் ஆணையத்தை சந்தித்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தா ராம் யெச்சூரி ஏஎன்ஐ செய்தி நிறுவனத் திடம் கூறினார்.