india

புல்டோசர் அரசியல்: பிரச்சனையை திசை திருப்பும் மாயாவதி

லக்னோ பாஜகவின் கொடிய புல் டோசர் அரசியலுக்கு எதி ராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ள நிலை யில், “ஒருவர் குற்றம்சாட்டப்பட்டவர் என்பதற்காக அவருடைய வீட்டை எப்படி இடிக்க முடியும்? அவர் குற்ற வாளி என்று நிரூபிக்கப்பட்டாலும் கூட சட்டத்தின் நடைமுறையைப் பின் பற்றாமல் அதனைச் செய்ய முடியாது”  உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர். கவாய் மற்றும்கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு திங்களன்று உத்தரவிட்டது.

இந்நிலையில், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான மாயாவதி, புல்டோசர் அரசியலுக்கு எதிரான பிரச் சனையை திசைதிருப்பும் வகையில் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “உத்தரப்பிரதேச அரசும், எதிர்க்கட்சி யான சமாஜ்வாதி கட்சியும் புல்டோசர் அரசியலை உச்சநீதிமன்றத்திடம் விட்டுவிட வேண்டும். அங்கு இதற்கு ஒரு முழுமையான நீதி கிடைக்கும்” எனக் கூறியுள்ளார். 

அதாவது புல்டோசர் அரசியல் பிரச்சனையில்,  “இந்தியா” கூட்டணி யில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தலை யிட வேண்டாம் என பாஜகவிற்கு ஆதர வான நிலைப்பாட்டை மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளார்.