india

மாவோயிஸ்டுகள் தாக்குதல்: 3 பேர் பலி

ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலம் காங்கர் மாவட்டம் காஸ்ரண்டா- துமாபால் கிராமங்களுக்கு இடையே ரயில் தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. இப்பணிக்காக டீசல் ஏற்றப்பட்ட டேங்கர் லாரி நிறுத்தப்பட்டிருந்தது. இந்த லாரியை குறிவைத்து மாவோயிஸ்டுகள் செவ்வாயன்று தாக்குதல் நடத்தினர். டேங்கர் லாரி ஓட்டுநர் கவனிக்காத நேரத்தில், அதில் வெடிகுண்டை வைத்து வெடிக்கச் செய்துள்ளனர். இதில் டேங்கர் லாரி தூக்கி வீசப்பட்டு சிதைந்தது. லாரியில் இருந்த ஓட்டுநர் உள்ளிட்ட 3 பேர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

;