india

img

மணிப்பூர் கலவரத்திற்கு மாநில அரசு உடந்தை - பாஜக எம்.எல்.ஏ குற்றச்சாட்டு

மணிப்பூர் கலவரத்திற்கு மாநில அரசு உடந்தையாக செயல்பட்டது என்று  பாஜக எம்.எல்.ஏ பவுலின்லல் ஹவுகிப் தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2 மாதங்களாக தொடர்ந்துகொண்டிருக்கும் கலவரம் இந்தியாவையே உலுக்கியிருக்கிறது. கலவரத்தைக் கட்டுப்படுத்தாமல் ஒன்றிய மற்றும் மாநில பாஜக அரசுகள் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கின்றனர். இவ்விவகாரத்தில் பிரதமர் மோடியை, தி டெலிகிராஃப் உள்ளிட்ட பத்திரிகைகள் கடுமையாக விமர்சித்திருந்தன. இந்த நிலையில், இந்தியா டுடே பத்திரிகையில் மணிப்பூர் மாநில பாஜக எம்.எல்.ஏ பாவோலியன்லால் ஹவுகிப் கட்டுரை ஒன்றை எழுதி உள்ளார். 
அதில், மணிப்பூர் கலவரத்திற்கு பைரன் சிங் தலைமையிலான மாநில பாஜக அரசு உடந்தையாக செயல்பட்டதாகவும், தற்போது இதனை போதைப் பொருளுக்கு எதிரான போர் என்று திசை திருப்ப முயல்வதாகவும் பவுலின்லல் ஹவுகிப் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மேலும், குக்கி-ஜோமி இனத்தை அழிக்க நினைக்கும் லீபுன் மற்றும் ஆரம்பை டெங்கோல் அமைப்புகளுடன் பைரன் சிங் மிக நெருக்கமாக செயல்பட்டு வருபவர் என்றும் பவுலின்லல் ஹவுகிப் தெரிவித்துள்ளார்.