மணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்தி இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, 84 நாட்களுக்குப் பிறகு சிபிஐ விசாரணைக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.
மணிப்பூரில் கடந்த மே 4-ஆம் தேதி, பழங்குடியினப் பெண்களை நிர்வாணப்படுத்தி இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்தது. இந்த நிலையில் 84 நாட்களுக்குப் பிறகு, சிபிஐ விசாரணைக்கு ஒன்றிய அரசு பரிந்துரை செய்துள்ளது.