“மருத்துவ மாணவி கொலை விவகாரத்தில் மம்தா பானர்ஜி தனது அதிகாரத்தை பயன் படுத்தி குற்றஞ்சாட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், பொதுமக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார். இந்தப் பிரச்சனையில் இருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்ப மம்தா பானர்ஜி போராட்டம் நடத்துகிறார். மாநில முதல்வர் என்ற பொறுப்பை பயன்படுத்தி குற்றஞ்சாட்டப்பட்ட வர்கள் மீது அவர் கடுமையான நடவடிக்கை எடுத்தி ருக்க வேண்டும். சூழ்நிலையை கையாள தவறிய தால் மம்தா பானர்ஜி பதவி விலக வேண்டும்” என நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி கூறியுள்ளார்.
நில மோசடி புகார் தொடர்பாக தன் மீது வழக்கு தொடர ஆளுநர் அனுமதிக்கும் முடிவு அரசியல மைப்பிற்கு எதிரானது என கர்நாடக முதல்வர் சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார்.
மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களு க்கான பாதுகாப்புக்கு பரிந்துரைகளை வழங்க குழு அமைக்க இருப்பதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே வட கராவில் உள்ள பாங்க் ஆப் மகாராஷ்டிரா கிளையில் அடகு வைத்த நகைகளுடன் மேலாளர் தப்பியதாக காவல்துறையில் புகார் அளிக்கப் பட்டுள்ளது. அடகு வைக்கப்பட்ட 25 கிலோ நகைக ளுக்கு பதில் போலி நகைகளை வைத்துவிட்டு வங்கி மேலாளர் மது ஜெயக்குமார் தப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உத்தரப்பிரதேசத்தின் நொய்டாவிலுள்ள டிஎல்எப் மற்றும் ஹரியானாவின் குருகிரா மில் உள்ள ஆம்பியன்ஸ் வணிக வளாகங்களுக்கு சனிக்கிழமை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. விசாரணையில் இது வெறும் புரளி என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
பயங்கரவாதம், தீவிரவாதம், பிரிவினைவாதம் ஆகியவை நமது சமூகங்களுக்கு கடும் அச்சுறுத்தல்களாக உள்ளன என்று உலகளாவிய தெற்கு உச்சி மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்போம் என்ற பெயரில் 100 நாள்போராட்டத்தை தில்லியில் காங்கிரஸ் கட்சி தொடங்கியுள்ளது.
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்து வக்கல்லூரியில் முதுகலை மருத்துவ மாணவி பாலியல் வன்கொலை தொடர்பாக அக்கல்லூரியின் முன்னாள் முதல்வர் சிபிஐ விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப் பட்டுள்ளார்.
புதுதில்லி
குரங்கம்மை நோய் தடுப்பு
ஒன்றிய அரசு அவசர ஆலோசனை
உலகம் முழுவதும் குரங்கம்மை நோய் வேகமாக பரவி வரும் நிலையில், இந்தியாவில் குரங் கம்மை நோய் தடுப்பு தொடர்பான ஆலோ சனைக் கூட்டம் தில்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஒன்றிய சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டா, தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம், உலக சுகாதார அமைப்பு, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், பூச்சிகளால் பரவும் நோய்கள் கட்டுப்பாட்டு திட்டத்திற்கான தேசிய மையம், சுகாதார சேவைகள் பொது இயக்குநர கம், ஒன்றிய அரசு மருத்துவமனைகள், எய்ம்ஸ் மருத்துவமனை ஆகியவற்றின் நிபுணர்கள் கலந்து கொண்டனர்.