பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என அவரே விளக்கமளித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலை யில், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளார் முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர்.
பாஸ்வேர்டு பகிர்வதை நிறுத்தும் திட்டத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம், 2023 கடைசி காலாண்டில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்துக்கு புதிதாக 1.31 கோடி பயனாளர்கள் இணைந்தி ருக்கிறார்கள்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பாஜக “மோடியை தேர்ந்தெடுங்கள்” என்ற பெயரில் பாடலை வெளியிட்டு பிரச்சாரத்தைத் தொடங்கி யுள்ளது.
கச்சத்தீவு திருவிழாவிற்கு இந்தியாவிலிருந்து 8000 பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப் பட்டுள்ளது.
இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையில் கலந்துகொள்ளுமாறு திரிணாமுல் காங்கி ரஸ் தலைவர் மம்தா பானர்ஜீக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என தில்லி உயர்நீதி மன்றத்தில் புதியதாக மனு தாக்கல் செய்யப்பட்டுள் ளது.
நண்பனின் திருமணத்திற்காக ஹரியானா விற்குச் சென்ற தில்லி காவல் துறை உதவி ஆணையரின் மகனான லக்ஷ்யா சௌஹான் (26) கொலை செய்யப்பட்டு ஏரியில் வீசப்பட்ட விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாட்டிலேயே முதல்முறையாக கொலை செய்யப்பட்ட நபரை அடையாளம் காண, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை காவல்துறையினர் பயன்படுத்தி குற்றவாளிகளை பிடித்திருக்கும் சம்பவம் தில்லியில் அரங்கேறி யுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜன வரி மாதம் 31-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், நாடாளுமன்றத்திற்கு புதிதாக மத்திய தொழிற்பாதுகாப்பு படை (சிஐஎஸ்எப்) வீரர்கள் 140 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள னர்.
லக்னோ
மிரட்டும் குளிர்
தில்லிக்கு
ஆரஞ்சு எச்சரிக்கை
வடமாநிலங்களில் குளிர் வாட்டி வருகிறது. உத்தரப்பிரதேசம், தில்லி, பீகார், இமாச்சலப்பிர தேசம், உத்தரகண்ட் ஆகிய மாநில மக் கள் குளிர் காரணமாக வீடுகளுக்குள் ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.
இந்நிலையில், தலைநகர் தில்லியில் கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவில் உறைபனி அளவிற்கு 5 டிகிரி குறை வாக வெப்பநிலையில் பகலிலும் குளிர் வாட்டி வருவதால், குளிருக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்து, மதியம் 12 மணிக்கு மேல் மக்கள் வெளியில் நடமாட இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி யுள்ளது.
ஆட்டோ மீது லாரி மோதி 12 பேர் பலி
உத்தரப்பிரதேசத்தின் ஷாஜகான்பூர் மாவட்டத்தில் வியாழனன்று காலை அடர்த்தியான மூடுபனி காரணமாக சாலை சரிவர தெரியாத சூழலில், எதிர் பாராவிதமாக பயணிகள் ஆட்டோ மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர்.
பெங்களூரு
கர்நாடகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்த லுக்கு முன்பு காங்கிரஸ் கட்சி, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண் டும் கொண்டு வருவோம் என வாக்குறுதி அளித்திருந்தது. இந்த வாக்குறுதியின் படி கர்நாடக அரசு புதனன்று 2006-ஆம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சேர்ந்த அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதாக அறி வித்துள்ளது. இதற்கான அறிவிப்பை அம்மாநில முதல்வர் சித்தராமையா அர சாணையாக வெளியிட்டுள்ளார்.
கர்நாடகாவில் கடந்த 2003-ஆம் ஆண்டு பழைய ஓய்வூதியத் திட்டம் நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக் கது.