மக்களவையில் மேலும் 49 எதிர்க்கட்சி எம்.பி-க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்றத்தில் நடந்த அத்துமீறல் குறித்து உள்துறை அமைச்சர் விளக்கம் அளிக்க வலியுறுத்தியும், மக்களவையில் ஏற்கனவே 95 எம்.பி-க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து மக்களவையில் முழக்கங்கள் எழுப்பிய எம்.பி-க்கள் சுப்ரியா சுலே, தொல் திருமாவளவன், ஃபரூக் அப்துல்லா, சஷி தரூர், டேனிஷ் அலி, கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட 49 பேர் இன்று இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மக்களவையில் 47 எதிர்க்கட்சி எம்.பி-க்கள் மட்டுமே இருக்கின்றனர். இதுவரை, மக்களவையில் 95 எம்.பி-க்கள், மாநிலங்களவையில் 46 எம்.பி-க்கள் என மொத்தம் 141 எதிர்க்கட்சி எம்.பி-க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.