india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட பாஜக  வேட்பாளர்கள் பட்டியல் சனியன்று அறிவிக்  கப்பட்டுள்ளது. 195 பேர் கொண்ட முதல் பட்டிய லில் பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதி யில் மீண்டும் போட்டியிடுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா காந்திநகர் (குஜராத்) தொகுதியில் போட்டியிடுகின்றார்.

ஆயுதப்படைகளின் போர் தயார்நிலையை அதிகரிக்கும் முயற்சியாக ஒன்றிய பாது காப்புத் துறை அமைச்சகம் ரூ.39,125 கோடி  மதிப்பிலான 5 ஒப்பந்தங்களை இறுதி செய்துள் ளது. அதன்படி ரூ.19,518 கோடி செலவில் பிர மோஸ் ஏவுகணைகள், ரூ.988 கோடி செலவில் கப்பலில் எடுத்துச் செல்லக் கூடிய பிரமோஸ் ஏவு கணை அமைப்பை கொள்முதல் செய்ய பிர மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுதவிர ரூ.5,249 கோடி செலவில் மிக்-29 விமானத்துக்காக ஆர்டி-33 ஏரோ என்ஜின்களை கொள்முதல் செய்ய  ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ரூ.7,668 கோடி செலவில் சிஐடபிள்யூஎஸ் ஆயுத அமைப்பு, ரூ.5700 கோடி செலவில் அதிக சக்திகளைக் கொண்ட  ரேடார்களை கொள்முதல் செய்ய லார்சன் அண்டு  டியூப்ரோ நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற் கொண்டுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பெண் 3 பேர்  கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்  யப்பட்டதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். 

மதுபான கலால் கொள்கை வழக்கில் கைது  செய்யப்பட்டுள்ள ஆம் ஆத்மி மூத்த தலை வரும், தில்லி முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா,  ஆம் ஆத்மி சஞ்சய் சிங் ஆகிய  இருவருக்கும் மார்ச் 7 வரை காவல் நீட்டிக்கப் பட்டுள்ளது.

புதுதில்லி கூகுளுக்கு இந்திய இணையதளம் மற்றும் மொபைல் சங்கம் கண்டனம்

வழிகாட்டுதல்களுடன் இணங்காததால் இந் திய ஆன்லைன் செயலிகளான பாரத் மேட்ரி மோனி செயலி, ஜீவன் சாதி, 99 ஏக்கர்ஸ், நாக்ரி, ஷாதி டாட் காம், இன்போ எட்ஜ், ட்ரூலி மேட்லி  உள்ளிட்ட 10 இந்திய செயலிகளை தனது ப்ளே ஸ்டோ ரில் இருந்து வெள்ளியன்று நீக்கியது கூகுள் நிறு வனம். இதற்கு இந்திய இணையதளம் மற்றும் மொபைல் சங்கம் கண்டனம் தெரிவித்து சனியன்று அறிக்கை வெளியிட்டது. 

அதில்,”வழிகாட்டுதல்களுடன் இணங்காதது தொடர்பான வழக்கு விசாரணையில் இருக்கும்போது  10 செயலிகள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட விவ காரம் கண்டனத்துக்குரியது. இதனால் நீக்கப்பட்ட இந்  திய செயலிகளை உடனே ப்ளே ஸ்டோரில் சேர்க்க வேண்டுமென கூகுளுக்கு இந்திய இணையதளம் மற்றும் மொபைல் சங்கம் வலியுறுத்துகிறது” என கூறப்பட்டுள்ளது.

விஜயவாடா
தள்ளாடும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்
ஓட்டம் பிடிக்கும் எம்எல்ஏக்கள்

வரவிருக்கும் மக்களவை தேர்தலுடன் ஆந்  திரா சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடை பெறுகிறது. ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்  தனித்தும், காங்கிரஸ் - இடதுசாரிகள் கூட்டணி, பாஜக -  தெலுங்கு தேசம் - ஜனசேனா கூட்டணி என மாநி லத்தில் மும்முனை போட்டி உருவாகும் நிலை உள்  ளது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து முக்கிய தலைவர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் பலர் காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சிகளுக்கு தாவி  அந்த கட்சிக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரு கின்றனர்.

இந்நிலையில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின்  மூத்த தலைவர்களில் ஒருவரும், மைலவரம் சட்ட மன்ற தொகுதியின் எம்எல்ஏவுமான வசந்த கிருஷ்ணா  பிரசாத் சனியன்று சந்திரபாபு முன்னிலையில் தெலுங்கு தேசத்தில் இணைந்துள்ளார். இது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடை வாகக் கருதப்படுகிறது. காரணம் எம்டிஆர் மாவட்டத்  தில் மிகுந்த செல்வாக்கு மிக்க தலைவரான வசந்த கிருஷ்ணா பிரசாத், ஒய்எஸ்ஆர் காங்கிரஸின் வியூக  அமைப்பாளராகவும் இருந்தார் என்பது குறிப்பி டத்தக்கது.

புதுதில்லி
பெங்களூரு குண்டுவெடிப்பு எதிரொலி
பலத்த பாதுகாப்பு வளையத்தில் தில்லி

கர்நாடக மாநில தலைநகர் பெங்க ளூருவில் உள்ளது ஒயிட்பீல்டு ராமேஸ்வரம் கபே உணவகம். இந்த உணவகத்தில் வெள்ளியன்று பிற்  பகல் 1 மணியளவில் திடீரென பயங்கர  சத்தத்துடன் குண்டு வெடித்து சிதறியது. இதில் உணவக பணியாளர்கள் இருவர்,  ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் 2 பெண்  ஊழியர்கள் என‌ மொத்தம் 10 பேர் காய மடைந்தனர். 

வாடிக்கையாளர் ஒருவர் கை கழு வும் இடத்தில் வைத்துவிட்டுச் சென்ற  கைப்பை ஒன்றில் டைமர் பொருத்தப் பட்ட மேம்படுத்தப்பட்ட வெடிகுண்டு ஒன்று  வெடித்துள்ளதாக பெங்களூரு போலீசார்  முதற்கட்ட விசாரணையில் தெரிவித்துள் ளனர். 

இந்த விவகாரம் தொடர்பாக காவல்  துறை உயர்மட்ட அதிகாரிகளை அம்  மாநில முதல்வர் சித்தராமையா சனி யன்று மதியம் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தலைநகர் தில்லியில் கண்காணிப்பு உஷார்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அதி கம் கூடும் இடங்கள் குறிப்பாக தில்லியி லுள்ள சந்தைப் பகுதிகளில் கண்கா ணிப்பை அதிகப்படுத்தும்படி மாவட்ட காவல்துறை தலைவர்களுக்கு அறி வுறுத்தப்பட்டுள்ளது.

புதுதில்லி
225 மாநிலங்களவை எம்பிக்களின் சொத்து மதிப்பு ரூ.19,602 கோடி

தேர்தல் சீர்திருத்த அமைப்பான “ஜனநாயக சீர்திருத்த சங்கம்”  (ஏடிஆர்), “நேஷனல் எலெக் சன் வாட்ச்” ஆகிய இரு அமைப்புகள் இணைந்து நடத்திய ஆய்வில், நாடா ளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் களான 225 எம்பிக்களின் சொத்து மதிப்பு  ரூ.19,602 கோடி உள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளது. 

இதுகுறித்த ஆய்வறிக்கை யில் மேலும் கூறப்பட்டுள்ளதா வது,”ஒவ்வொரு உறுப்பினரின் சரா சரி சொத்து மதிப்பு ரூ.87.12 கோடியா கும். பணக்கார எம்பிக்கள் பட்டியலில் பிஆர்எஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பாஜக உறுப்பினர்கள் முறையே முதல்  மூன்று இடங்களைப் பிடித்துள்ளனர். பாஜகவின் 90 பேரில் 9 பேர், காங்கிர சின் 28 பேரில் 4 பேர், ஒய்எஸ்ஆர் காங்கி ரசின் 11 பேரில் 5 பேர், ஆம் ஆத்மியின் 10இல் 2 பேர், பிஆர்எஸின் 4 பேரில் 3 பேர், ராஷ்ட்ரிய ஜனதாதளத்தின் 6 பேரில் 2 பேர் தலா ரூ.100 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளனர். 

அகமதாபாத்
குஜராத்தில் 29 ஆண்டுகளாக 
புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் கட்டவில்லை

பாஜக ஆளும் குஜராத் மாநிலத்  தில் தற்போது பட்ஜெட் சட்ட மன்ற கூட்டத்தொடர் நடை பெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில்  புதிய மருத்துவ கல்லூரிகள் குறித்து  காங்கிரஸ் எம்எல்ஏ எழுப்பிய கேள்விக்கு  குஜராத் சுகாதாரத்துறை அமைச்சர் அளித்த பதிலில், “குஜராத்தில் ஆறு  அரசு மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே  இயங்கி வருகின்றன. 1995-ஆம் ஆண்டி லிருந்து புதிய அரசு மருத்துவக் கல்லூரி கள் எதுவும் கட்டப்படவில்லை.  2023-ஆம்  ஆண்டு மட்டும் 4 புதிய கல்லூரிகளுக்கு  அனுமதி வழங்கப்பட்டுள்ளது” எனக் கூறி னார். அதாவது குஜராத்தில் 29 ஆண்டு களாக புதிய அரசு மருத்துவக்கல்லூரி கள் கட்டவில்லை என பாஜக அரசு ஒப் புக்கொண்டுள்ளது. குஜராத்தில் 1871- ஆம் ஆண்டு அகமதாபாத்தில் முதல்  மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட்ட நிலையில், இறுதியாக காங்கிரஸ் ஆட்  சிக்காலத்தில் 1995-ஆம் ஆண்டு பாவ்நக ரில் மருத்துவக் கல்லூரி நிறுவப்பட் டுள்ளது. அதன்பின்னர் எந்த மருத்து வக்கல்லூரியும் அங்கு அமைக்கப்பட வில்லை.

குஜராத் மாநிலத்தில் கடந்த 1995-ஆம்  ஆண்டு முதல் முறையாக பாஜக ஆட்சி யமைத்தது. அதிலிருந்து தற்போதுவரை  அங்கு பாஜக ஆட்சியே நடைபெற்று வருகிறது.