india

img

நமது புன்னகையை யாரும் களவாட விடக்கூடாது!

காஷ்மீர் இந்தியாவோடு இணைக்கப் பட்டது ஒரு வரலாற்று நிகழ்வு. அதன் பின்னணி புரிந்து கொண்டால் தான் இன்றைய நடப்புகளை நம்மால் சரியாக அணுக முடியும்.

காலனிய ஆதிக்க பிரிட்டிஷ் பேரரசு தான் தேசப் பிரிவினைக்குக் காரணம் என்பதை அழுத்தமாகப் புரிந்து கொள்ளவேண்டும். தேச விடுதலைக்குப் போராடிய தலைவர்கள் மீது நமக்கு மாறுபட்ட கருத்துக்களோ, விமர் சனங்களோ இருக்கலாம், ஆனால் அவர்கள் மீது பழி போடுவதை நாம் ஏற்கமுடியாது. முக்கியமாக மகாத்மா காந்தி மீது இலக்கு  வைக்கப்படுகிறது. சாதி, மத, மொழி வேறுபாடு களைக் கடந்து தேச மக்களை பிரம்மாண்ட மான முறையில் வெள்ளை ஏகாதிபத்தி யத்திற்கு எதிராக அணிதிரட்டியதில் அவரது ஆகப்பெரிய பங்களிப்பை நாம் மறந்துவிட முடியாது. 

விடுதலைப் போரில் பங்களிப்பு செய்யாதவர்கள் 
இந்து, சீக்கியர், கிறித்தவர், இஸ்லாமியர் என பல்வேறு மதத்தவர், வெவ்வேறு மொழிபேசும் மக்கள் எல்லாம் திரண்டு போராடித் தான் தேசம் விடுதலை அடைந்தது.  தூக்குக் கயிற்றை முத்தமிட்ட பகத் சிங், ராஜ குரு, சுகதேவ் போன்றோர் தியாகங்கள் மகத்தானவை.  தோழர் ஏ.கே.கோபாலன் சுதந்திரக் கொடியை அந்த நள்ளிரவில் சிறை யினுள் தான் ஏற்றினார். நேருவில் இருந்து அபுல் கலாம் ஆசாத் வரை நாடு நெடுக எத்தனை எத்தனை போராளிகள்.... ஆனால், விடுதலை போராட்டத்தோடு எந்த விதத்திலும் தொடர்பற்றவர்கள் தான் இன்றைய ஒன்றிய ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்கள்.

சுதந்திரப் போரில் தொடர்பு உள்ளவர் என்று இவர்கள் சொல்லும் ஒற்றை மனிதரும் (சாவர்க்கர்) பிரிட்டிஷ் ஆட்சிக்குக் கருணை மனு எழுதிப் போட்டுக் கொண்டிருந்தவர். அதனால் தான் இவர்களுக்கு தேச ஒருமைப்பாடும், மக்கள் ஒற்றுமையும் ஒவ்வாததாக உள்ளது.  தேசப் பிரிவினையின் போது வங்கப் பகுதியிலும், பஞ்சாபிலும் எவ்வளவு இரத்தம் சிந்தப்பட்டது...எத்தனை எத்தனை  உயிர்ச்சேதம் ... ஆனால், காஷ்மீர் பகுதியில் ஓரிடத்திலும் எந்தக் கலவரமும் நேரவில்லை.

வெவ்வேறு மதத்தினரும் கலந்து வாழ்ந்து வந்த போதிலும் அத்தனை நல்லிணக்கத்தோடு வாழ்ந்துவரும் சமூகம். தீவிரவாதிகளாகப் பிறக்கவில்லை நாங்கள் யாரும், எங்கள் பிள்ளைகளும் தீவிரவாதிகள் இல்லை. காஷ்மீர் ஒன்றும் தீவிரவாதிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை அல்ல.  ஆனால் அதைத் தான் இப்போது தீவிரவாதிகள் பூமி என்று முத்திரை குத்திவிட்டனர் ஒன்றிய ஆட்சியாளர்கள்.  இதை மிகுந்த வலியோடு குறிப்பிட விரும்புகிறேன். 

370ஆவது சரத்து எப்படி வந்தது?
ஆகஸ்ட் 15, 1947இல் காஷ்மீர் பகுதி இந்தியாவோடு இணையவில்லை. ஏனெனில் அதை ஆண்டு வந்த ஹரிசிங் என்ற இந்து மன்னர் அதற்கு விருப்பம் காட்டவில்லை. பலகட்ட முயற்சிகள், பேச்சுவார்த்தைகளை அடுத்து உடன்பாடு ஏற்பட்டு ஒரு சிறப்பு அந்தஸ்தோடு இணைக்க வேண்டிய சூழலில் தான் பின்னர் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் 370ஆவது சரத்து உருவானது.

அது  பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு இல்லத்தில் வைத்து எழுதப்பட்டது அல்ல, இன்றைய ஆட்சி யாளர்கள் தங்களது ஆதரவுக் குரலாகக் காட்ட முயற்சி செய்யும் சர்தார் வல்லப பாய்  படேல் இல்லத்தில் வைத்து நிகழ்ந்த கூட்டத்தில் விவாதித்துத் தயாரான சரத்து. அரசியல் நிர்ணய சபை ஏற்றுக் கொண்ட சரத்து, கேபினெட் அமைச்சர் பொறுப்பில் இருந்த இந்துத்துவ சித்தாந்தவாதி சியாம பிரசாத் முகர்ஜி உள்ளிட்டு எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட  சரத்து. (சியாம பிரசாத் முகர்ஜி தான் பின்னர் பாரதீய ஜன சங்  கட்சியை உருவாக்கியவர். அது தான் இன்றைய பாஜகவின் முன்னோடி). டாக்டர் அம்பேத்கரும்,

அவரைப் போன்ற மற்ற தலைவர்களும் அரும்பாடுபட்டு உருவாக்கி வழங்கிய அரசியல் அமைப்புச் சட்டத்தைத் தகர்த்தெறிய இறங்கியுள்ள ஒன்றிய ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்கள், இணைப்புப் பாலமாகக் கருதப்பட்ட சரத்தை ஒழித்துக் கட்டிவிட்டனர். 

திசை திருப்பும் ஆட்சியாளர்கள் 
வர்களிடம் தீர்வில்லை. கர்ப்பிணி பெண்கள் இரத்த சோகை பீடித்திருக்கும் விகிதம் அதிகரித்துக்  கொண்டிருக்கும் நாடு.  ஊட்டச் சத்து இல்லாத குழந்தைகள். வளர்ச்சி  பாதிப்புற்ற சிறார்கள் அதிகமாகி வரும் தேசம் இது. ஆட்சியாளர்கள் சாதனை என்ன வெனில் பில்லியனர்கள் எண்ணிக்கை அதி கரித்திருப்பது.

மாறாக,வேலையில்லாத் திண்டாட்டம் பெருகியுள்ளது. இப்படியான பிரச்சனைகளில் இருந்து மக்களை திசை திருப்பவே இவர்கள் மதத்தைக் கையில் எடுக்கின்றனர்.  ஒரு தேசம், ஒரே மொழி என்கின்றனர். எத்தனையோ மொழிகள் பேசும் மக்கள்  உள்ள நாட்டில் ஒரு குறிப்பிட்ட மொழியை  எங்களுக்குப் பிடிக்காது என்று ஆட்சியாளர்கள் சொன்னால், உங்கள் ஆட்சியை எங்களுக்குப் பிடிக்கவில்லை என்று மக்கள் தூக்கி ஏறிய  வேண்டிய தருணம் இது. நமது புன்னகையை யாரும் களவாட விடக்கூடாது. 

ஏன் இன்னும் தேர்தல்கள் நடத்தவில்லை?
ஜம்மு - காஷ்மீரின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைக் கலைத்தனர். 370ஆவது பிரிவை நீக்கினர். மாநிலம் துண்டாடப்பட்டு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டன.என்ன சொல்லப்பட்டது ? தீவிர வாதத்தை ஒழிப்போம், அமைதியை நிலை நாட்டுவோம். ஆனால் என்ன நடந்தது? தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். மக்கள் கடுமை யாகத் தாக்கப்பட்டனர். எங்கும் யாரும் நகர முடியாத கொடுமையான தடை உத்தரவுகள். அலைபேசி இணைப்பு, இணையதள இணைப்பு எல்லாம் முடக்கப்பட்டன.

அனைத்து சிவில் உரிமைகளும் மறுக்கப் பட்டன. கல்வி நிலையங்கள் இழுத்து மூடப்பட்டன. ஜனநாயகம் அறவே மறுக்கப் பட்டது. ஆனால், இந்தியாவின் மற்ற பகுதி களில் எந்தப் பெரிய சலனமும் இல்லை.

நாளையே வேறு மாநிலங்களிலும் இதே அணுகு முறை கையாளப்படும் என்பதை யாராலும் மறுக்க முடியுமா, ஏன் தமிழகத்தில் கூட இப்படியான அத்து மீறல் நடக்கக் கூடும்.  இவ்வளவு அநீதி இழைத்த ஒன்றிய ஆட்சியாளர்கள், நான்கு ஆண்டுகள் கடந்தபின்னும் ஏன் இன்னும் காஷ்மீரில் தேர்தல்கள் நடத்தவில்லை?  தங்களால் வெற்றி பெற முடியாதென்ற அச்சத்தில் தான் கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் புறந்தள்ளி விட்டுப் போய்க் கொண்டிருக்கின்றனர். அவமதிப்பு, அவமானங்களையெல்லாம் சுமந்து ஒரு பகுதி மனிதர்கள் தேசத்தில் அவ திப்பட்டிருக்க, அதைக் கண்டும் காணாதது போல் மற்றவர்கள் போய்க் கொண்டிருக்கக்  கூடாது.

 சக மனிதர்கள் சுய மரியாதையோடு வாழ முடியாத தன்மையைப் பாராமுகமாகக் கடந்து விடக்கூடாது. அப்படியானால் நாம் நம்மை மனிதர்களாகக் கருதுவதில் எந்தப் பொருளும் இருக்காது. குரல் கொடுத்து நியாயத்திற்காகப் போராடாவிட்டால், இனி தலையிடவே முடியாது என்கிற அளவுக்குக் காலம் கடந்துவிடும்.

அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு ஆபத்து 
ஆட்சியாளர்கள் தங்களைக் கேள்விக்கு உள்ளாக்கும் உறுப்பினர்களை நாடாளுமன்றத்திலிருந்தே அகற்றுகின்றனர். 146 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளனர். எதிர்க்கட்சி உறுப்பினர்களை எல்லாம் அப்புறப்படுத்தி விட்டு, எந்த விவாதமும் இல்லாமல் மசோதாக்கள் நிறை வேற்றப்படுகின்றன. ஜனநாயகம், மதச்சார் பின்மை, கூட்டாட்சி தத்துவம் எல்லாம் தகர்க்கப்படுகிறது.

 தமிழகத்தில் அண்மையில் ஏற்பட்ட புயல், சூறாவளி, பெருமழை வெள்ளத்தினால் கடுமை யான சேதம் ஏற்பட்டுள்ளது, உயிரிழப்பு, கால் நடைகள், பயிர்கள், உடைமைகள் என ஏராளமான விஷயங்கள் பறிகொடுத்துத் திண்டாடுகின்றனர் மக்கள். ஆனால், நிவாரணம் தர மறுக்கிறது ஒன்றிய ஆட்சி.  கூட்டாட்சித் தத்துவம் கீழே போட்டு மிதிக்கப்படுகிறது என்பதற்கு வேறென்ன சான்று வேண்டும். அல்லலுறும் தமிழக மக்கள் துயரத்தை நான் பகிர்ந்து கொள்கிறேன்.

நீங்கள் நீதி கேட்டு வலுவாகப் போராட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.  காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது சரத்து நீக்கப்பட்ட போது பாஜக உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள் ஆட்டமும், கும்மாளமும் போட்டு சிரித்துக் கொண்டிருந்த போது, அதற்கு எதிராகக் குரல் கொடுத்த இடதுசாரிகள், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளோடு தமிழக  ஆட்சிப் பொறுப்பில்  இருக்கும் திராவிட முன்னேற்ற கழகமும் காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக நின்றதைப் பாராட்ட வேண்டும்.

அவர்கள் தொடர்ந்து ஜனநாயகத்திற்கான குரலை வலுப்படுத்த வேண்டும் என்று இந்தத் தருணத்தில் கேட்டுக் கொள்கிறேன். வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக தேசம் தழுவிய வலுவான ஒன்றுபட்ட பதிலடி கொடுக்க வேண்டிய இன்றைய காலத் தேவையை உறுதி செய்வோம்.

தமிழில்: எஸ்.வி. வேணுகோபாலன்

பாலஸ்தீனம்-காஷ்மீரில் நடப்பது என்ன என்ற தலைப்பில் சென்னையில் ஜனவரி 10 அன்று தமிழக ஒற்றுமை மேடை நிகழ்ச்சியில் சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் யூசுஃப் தாரிகாமி அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து...