கோயம்புத்தூர், ஜன.8- காஷ்மீரின் அதிகாரத்தைப் பறித்து, தங்களது குறுகிய அரசியல் ஆதாயத்திற் காக பாஜக மேற்கொண்ட சூழ்ச்சிகளை இந்திய மக்கள் உணர்ந்து தக்க பாடம் புகட்டுவார்கள் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் முகமது யூசுப் தாரிகாமி தெரிவித்தார்.
கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு சார்பில் சிறுபான்மை மக்கள் பாதுகாப்பு மாநாடு ஞாயிறன்று நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.ஆர்.முருகேசன் வர வேற்றார். இதில் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும், காஷ்மீர் மக்களின் மகத்தான தலைவருமான முகமது யூசுப் தாரிகாமி உரையாற்றினார்.
பாலஸ்தீனத்தின் வலி
முகமது யூசுப் தாரிகாமி பேசுகையில், “பாலஸ்தீனத்தில் நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும்போது, அங்கு வாழும் மக்களின் வலியையும் வேதனையையும் நாம் உணரவில்லை எனில் நாம் மனிதர்களாக உணர முடியாது. அம்மக்களின் நிலையை வெளிக்கொணர முயற்சிக்கும் ஊடகவியலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் படுகொலை செய்யப்படுகிறார்கள். வரலாற்று ரீதியில் நாமும் பாலஸ்தீன மக்களுடன் தொடர்புடை யவர்களாக இருக்கிறோம். ஏனெனில் நாமும் இத்தகைய வலியையும் வேதனையையும் அனுபவித்து இருக்கின்றோம். இந்திய மக்கள் சுதந்திரப் போராட்டத்தின் போது என்ன மாதிரியான வலியையும் வேதனை யும் அனுபவித்தார்களோ, அதைத்தான் இப்போது பாலஸ்தீன மக்களும் அனு பவித்து வருகிறார்கள். இது நமக்கு கவலை யை அளிப்பதாக உள்ளது” என்று கூறினார்.
காந்தி கனவில் வருகிறார்
“சில சமயங்களில் மகாத்மா காந்தி எனது கனவில் வருகிறார். அப்போது அவர், நான் படுகொலை செய்யப்பட்டு விட்டேன் என்னை மீண்டும் கொல்லாதீர்கள் என்று கேட்கிறார். இந்த தேசத்தில் மீண்டும் மீண்டும் குண்டுகளைப் பயன்படுத்தி மக்க ளைக் கொல்ல வேண்டாம் எனக் கேட்கிறார். காந்தியின் சில கோட்பாடுகளோடு நாம் ஒருவேளை முரண்பட்டு இருக்கலாம். ஆனால், அவர் இந்தியாவில் மக்களை இந்தியர்களாக பார்க்க விரும்பினாரே தவிர மதத்தின் அடிப்படையில் பிரித்துப் பார்க்க ஒருபோதும் விரும்பியதில்லை. பலதரப்பட்ட மத நம்பிக்கை உள்ளவர்கள் மத நம்பிக்கை இல்லாதவர்கள் காந்தியின் உடன் சுதந்திரப் போராட்டத்தை ஒன்றி ணைந்து முன்னெடுத்துச் சென்றார்கள்.
மனிதர்கள் மனிதநேய மிக்கவர்களாக இருக்க வேண்டுமே தவிர அரசர்களாக இருக்கக் கூடாது என காந்தி கருதினார்” எனக் குறிப்பிட்ட தாரிகாமி, மணிப்பூரில் நடந்த கலவரமாக இருக்கட்டும், குஜராத்தில் நடந்த கலவரம் ஆக இருக்கட்டும், அல்லது காஷ்மீரில் நடந்த கலவரமாக இருக்கட்டும் இந்த வேதனை களை நாம் பகிர்ந்து கொள்ள பழகிக் கொள்ள வேண்டும்.
இதற்கு சாதி, மதம், மொழி என எந்த அடையாளங்களும் இல்லை என வேண்டுகோள் விடுத்தார். “இந்தியாவில் அண்மையில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற்ற போது, அதில் பங்கேற்ற தலைவர்கள் காஷ்மீருக்கு விருந்தினர் களாக அழைத்து வரப்பட்டார்கள். காஷ்மீர் அமைதியாக இருப்பதாக நிறுவ முயன்றார் கள். ஆம், வெளியிலிருந்து வந்து பார்த்து செல்பவர்களுக்கு காஷ்மீர் அமைதியாகத் தான் இருக்கும். ஆனால் அங்கு வாழும் ஏழை, எளிய மக்களுக்கு அது அமைதி யான பூமியாக இல்லை” எனக் குறிப்பிட்ட தாரிகாமி, “காஷ்மீரில் 370வது சிறப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் அனை வருக்குமான காஷ்மீர் உருவாகியுள்ளதாக பேசுகிறார்கள். இன்று காஷ்மீருக்கு ஏற்பட்ட சூழல் நாளை மற்ற மாநிலங்களுக்கும் உரு வாகலாம், மற்ற மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படலாம்” என்று எச்சரித்தார்.
தொடர்ந்து பேசிய தாரிகாமி, “இன்று ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் பொய்களை திறம்பட பேசுவதில் வல்ல வர்களாக இருக்கிறார்கள். நாம் வர லாற்றில் இருந்து உரிய பாடத்தை கற்றுக் கொண்டால்தான் எதிர்காலத்தை பாது காப்பானதாக உருவாக்கிக் கொள்ள முடியும். மிக நீண்ட காலமாக காஷ்மீர் குறித்து தவறான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப் படுகிறது. தேசம் விடுதலை பெற்ற போது ஆங்கிலேயர்களின் சூழ்ச்சியால் இந்தியா வாகவும், பாகிஸ்தானாகவும் பிரிவினை செய்யப்பட்டது.
காஷ்மீர் யாருடன் சேர வேண்டும் என்று சூழல் வந்த போது அங்கு வசிக்கும் பெரும்பான்மை மக்கள் இஸ்லாமியர்களாகவும், மன்னர் ஹரி சிங் இந்துவாகவும் இருந்தார். பெரும் பான்மை மக்கள் இஸ்லாமியர்களாக இருந்ததால் காஷ்மீர் பாகிஸ்தானுடன் இணைய வேண்டும் என பாகிஸ்தான் கேட்டுக் கொண்டது. அப்போது மன்னர் இரு நாடுகளுடனும் இணையாமல் சுயாட்சி கொண்ட நாடாக இருக்க விரும்பினார். ஆனால் இன்று நமக்கு தேச பக்தி பற்றி கற்பிப்பவர்கள், காஷ்மீர் மக்களின் விருப்பத் தாலும், அன்று மன்னர் ஹரி சிங்குக்கு ஆதரவாக இருந்தார்கள். அப்போதைய இந்திய தலைவர்களின் வலியுறுத்தலாலும் காஷ்மீர் இந்தியாவுடன் தன்னை இணை த்துக் கொண்டது.
மனித மாண்புகளின் அடிப்படையில் காஷ்மீர் இந்தியாவோடு இணைந்த போது அவர்களது கலாச்சாரமும் வாழ்வியலும் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கையை அளிப்பதற்காக 370 சிறப்பு சட்டப்பிரிவு ஏற்படுத்தப்பட்டது. காஷ்மீரி பண்டிட்டுகள் மீது தாக்குதல் நடைபெற்ற போது அங்கு இஸ்லாமியர்களும், சீக்கி யர்களும் தங்களது ஆடைகளை கொடுத்து உதவினார்கள். இந்த தேசத்தின் விடு தலைக்காக எந்த பங்களிப்பையும் செய்யாத வர்கள் இன்று நாம் என்ன உடை அணிய வேண்டும் என்று சொல்கிறார்கள்.
நாம் என்ன உணவை உண்ண வேண்டும் என்று அவர்கள் கட்டளையிடுகிறார்கள். ஹலால் உணவு கூடாது என்கிறார்கள். இப்படி யான இந்திய தேசத்தையா போராடி விடு தலையைப் பெற்றவர்கள் கனவு கண்டார்கள்?” என, வேதனையுடன் கேள்வி எழுப்பினார். இந்த நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ். கிருஷ்ணமூர்த்தி, யு.கே. சிவஞானம், கே. மனோகரன், கே.அஜய் குமார், கே.எஸ். கனகராஜ், என். ஆறுச்சாமி, வி.சுரேஷ், ஆர்.கோபால், வி. தெய்வேந்தி ரன், வி.ஆர். பழனிச்சாமி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.