india

img

மசூதிகளில் ஒலிபெருக்கிகளைத் தடை செய்ய வேண்டும் என்பது நாட்டுக்கு நல்லதல்ல- லாலு பிரசாத்யாதவ்

மசூதிகளில் ஒலிப்பெருக்கிகளை தடை செய்ய கோரி போராடுவது நாட்டுக்கு நல்லதலல என்று லாலுபிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார். 

ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவரும் ஒன்றிய அரசின் முன்னாள் அமைச்சருமான லாலு பிரசாத் யாதவ், தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து புதனன்று  டிஸ்சார்ஜ்  செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து தில்லியில்  செய்தியாளர்களை சந்தித்த லாலு பிரசாத் யாதவ், மத வழிபாட்டுதலங்களில் ஒலிபெருக்கி அகற்றப்படுவது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

“மசூதிகளில் ஒலிபெருக்கிகளைத் தடை செய்ய வேண்டும் என கோருபவர்கள் நம் நாட்டைப் பிளவுபடுத்த நினைக்கின்றனர். நீங்கள் ஏன் மசூதிக்கு அருகில் சென்று ஹனுமான்  சாலிசா  பாட விரும்புகிறீர்கள்? நீங்கள் ஹனுமான் சாலிசாவை பாராயணம் செய்ய விரும்பினால், அதை உங்கள் கோவிலில் செய்யுங்கள்” என்று அவர் கூறியுள்ளார். மேலும், “வேண்டுமென்றே மற்றவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும் செயல். இதற்கு மக்கள் எதிர்வினையாற்றுவார்கள். அதனால், வகுப்புவாத மோதல்கள் ஏற்படும். இது நாட்டுக்கு நல்லதல்ல. மிகவும் ஆபத்தானது” என்று லாலு பிரசாத் யாதவ் எச்சரித்துள்ளார்.