india

விவசாயிகளிடம் கங்கனா ரணாவத் மன்னிப்புக் கேட்க வேண்டும்!

இந்தியாவில் விவசாயத்தைக் கார்ப்பரேட்டுகள் கபளீகரம் செய்வதற்காகக் கொண்டுவரப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களையும் எதிர்த்து வீரச்சமர் புரிந்த விவசாயிகளின் போராட்டத்தை கெடுநோக்கத்து டன்  மிகவும் இழிவுபடுத்தி பொறுப்பற்ற முறையில் அறிக்கைகள் வெளியிட்டிருப்பதற்கு அகில இந்திய விவசாயிகள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறது.  

 நடிகையும் பாஜக எம்பியுமான கங்கனா ரணாவத், இந்தி நாளிதழ் ஒன்றில் அளித்துள்ள நேர்காணலில், “அந்நிய சக்திகளுக்கு” உதவுவதற்காகவும், இந்தியாவை பலவீனப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் தேச விரோத சக்தியாக விவசாயிகள் போராட்டத்தை அவர் சித்தரித்திருந்தார். மேலும் அவர் தன்னுடைய நேர்காணலில், வங்க தேசத்தில் நடந்ததுபோல ‘வண்ணப் புரட்சி’க்குத் திட்டமிட்டு விவசாயிகள் போராட்டம் நடந்தது என்னும் சித்தரித்திருந்தார்.

அந்நிய சக்திகள், அதானி, அம்பானி இசைக்கு நடமாடியவர்

உண்மையில், விவசாயிகள் கடுமையான வானிலை, கோவிட் தொற்று மற்றும் ஆர்எஸ்எஸ்/பாஜக கட்டவிழ்த்துவிட்ட அடக்குமுறைகளைத் துச்சமெனத் தூக்கியெறிந்து வீரஞ்செறிந்த முறையில் போராடிக் கொண்டிருந்தனர். அதே சமயத்தில் மேற்படி நடிகையான கங்கனா ரணாவத் தான் “அந்நிய சக்திகளாக” விளங்கிய மேலாதிக்க உலக மூலதனம் மற்றும் அவர்களின் உள்நாட்டுப் பிரதிநிதிகளாகச் செயல்பட்டு வந்த அதானி மற்றும் அம்பானி போன்றவர்கள் அமைத்துத்தந்த இசைக்கு நடனமாடியவர்.  

விவசாயிகளைப் பற்றிய அவரது வெறுக்கத்தக்க கருத்துக்கள், குறிப்பாக விவசாயப் பெண்களைப் பற்றிய அவரது இழிவான கருத்துக்கள், விவசாயத்தை விழுங்க விரும்பும் தனது “அந்நிய” மற்றும் “உள்நாட்டு” முதலாளிகளை மகிழ்விக்க ரணாவத் எந்த எல்லைக்கும் செல்வார் என்ற உண்மையை வெளிச்சம்போட்டுக் காட்டியது. கங்கனா ரணாவத், விவசாய இயக்கத்துடன், பாலியல் பலாத்காரங்கள் மற்றும் கொலைகளை இணைக்கும் முயற்சியில் முற்றிலும் தவறான அறிக்கைகளை வெளியிட்டார். விவசாயிகள் போராட்டத்தின்போது 736 பேர் தியாகிகளாகி இருக்கிறார்கள் என்பதும், ரணாவத்தின் சகாக்களான ஆர்எஸ்எஸ்/பாஜகவைச் சேர்ந்தவர்கள் லக்கிம்பூரில் போராடிய விவசாயிகளைக் கொன்றுள்ளார்கள் என்பதும் அனைவரும் அறிந்த உண்மைகளாகும்.

ஏகாதிபத்திய எதிர்ப்பு, சுதந்திரப் போராட்ட பகத்சிங் உத்வேகம்

கொடூரமான வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் இயக்கம், பிரிட்டிஷா ருக்கு எதிரான ஏகாதிபத்திய எதிர்ப்பு சுதந்திரப் போராட்டத்திலிருந்து அகில இந்திய விவசாயிகள் சங்கம் உத்வேகம் பெற்றது என்பதை ரணாவத் மற்றும் ஆர்எஸ்எஸ்/பாஜக-வினருக்கு நினைவுபடுத்துகிறோம். விவசாயிகள் போராட்டத்தின்போது தியாகி பகத்சிங், போராளிகளுக்கு ஓர் உந்துசக்தியாகத் திகழ்ந்தார். 

சுதந்திரப் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்து பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகளாகச் செயல்பட்ட ஆர்எஸ்எஸ், இந்து மகாசபை, முஸ்லிம் லீக் போன்ற பிற்போக்கு மதவாத சக்திகளுக்கு விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்களின் தேசப்பற்றைக் கேள்வி கேட்கும் தார்மீக அதிகாரம் இல்லை. ரத்து செய்யப்பட்ட மேற்படி மூன்று வேளாண் சட்டங்களும் அமல்படுத்தப்பட்டிருந்தால், அவை நிச்சயமாக நாட்டின் இறையாண்மையுடன் சமரசம் செய்துகொண்டு, நாட்டின் உணவுப் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருக்கும்  என்பதை அகில இந்திய விவசாயிகள் சங்கம் மீண்டும் வலியுறுத்திக் கூறிக்கொள்கிறது.

பிரதமர் மோடியும் மன்னிப்புக் கேட்க வேண்டும்

ரணாவத் விவசாயிகளுக்கு ஆத்திரமூட்டும் விதத்திலும், விவசாயிகளை இழிவுபடுத்தியும் வெளியிட்டுள்ள, தன் அறிக்கைகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் விவசாயிகளிடம் மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் அகில இந்திய விவசாயிகள் சங்கம் கோருகிறது. இதற்காக பிரதமர் மோடியும் விவசாயிகளிடம் மன்னிப்புக் கோர வேண்டும்.

விவசாயிகளுக்கு எதிராக வேண்டுமென்றே தவறானவிதத்தில் அறிக்கைகள் வெளி யிட்டிருக்கும் ரணாவத்தின் அறிக்கைகள் மீது உச்சநீதிமன்றம் தாமாகவே முன்வந்து விசாரணை மேற்கொண்டு, அவருக்கு எதிராக உரிய தண்டனை அளித்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.                              (ந.நி.)