வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சி களின் “இந்தியா” கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் என தக வல் வெளியாகி வருகிறது. இதனால் பாஜக தோல்வி பயத்தில் ஜனநாய கத்திற்கு எதிராக பல்வேறு சித்து விளையாட்டுகளை அரங்கேற்றி வரு கிறது. அமலாக்கத்துறை மிரட்டல் மற்றும் பாரத ரத்னா விருதுகள் மூலம் “இந்தியா” கூட்டணியில் அங்கம் வகித்த ஐக்கிய ஜனதாதளம், ராஷ்ட்ரிய லோக் தளம் ஆகிய கட்சிகளை தங் கள் பக்கம் பாஜக இழுத்தது. இந் நிலையில், மக்களவை தேர்தல் பிரச் சாரத்திற்கு வரமுடியாத படி ஜார்க் கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன், தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரை அமலாக் கத்துறை மூலம் சிறையில் அடைத் துள்ளது மோடி அரசு.
இந்நிலையில், அமலாக்கத்துறை மிரட்டல் மூலம் ஜனார்த்தன ரெட்டி யை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வந்துள்ளது பாஜக. முன்பு கர்நாடக பாஜகவின் முக்கிய தலைவராக இருந்த முன்னாள் அமைச்சர் ஜனா ர்த்தன ரெட்டி, கல்யாண ராஜ்ய பிர கதி பக்ஷா (கேஆர்பிபி) கட்சியை ஆரம்பித்து 2023 சட்டமன்ற தேர்த லில் 42 தொகுதிகளில் தனித்து போட்டி யிட்டு, தான் போட்டியிட்ட கங்காவதி தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றார். சமீபத்தில் நிறைவு பெற்ற மாநிலங்களவை தேர்தலில் கூட காங்கிரஸ் கட்சிக்கு கேஆர்பிபி ஆத ரவு அளித்தது. இந்நிலையில், ஜனார்த் தன ரெட்டி “இந்தியா” கூட்டணியில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் கர்நாடக மாநிலத்தில் பாஜகவிற்கு 10 தொகுதிகள் கூட கிடைப்பது கடினம் என கன்னட பிராந்திய தொலைக்காட்சிகள் கருத்துக்கணிப்புகளின் முடிவுகளை வெளியிட்டது.
இதையடுத்து ரூ.18 கோடி அளவிலான சட்டவிரோத பணப்பரிமாற்ற விவகாரத்தை கையி லெடுத்த பாஜக, அமலாக்கத்துறை மூலம் மிரட்டி ஜனார்த்தன ரெட்டி யை மீண்டும் தங்கள் பக்கம் இழுத் துள்ளது. திங்களன்று மூத்த தலைவர் எடியூரப்பா, மாநில தலைவர் விஜ யேந்திரா முன்னிலையில் தனது மனைவியுடன் கேஆர்பிபி கட்சியை கலைத்து பாஜகவில் இணைத்தார் ஜனார்த்தன ரெட்டி. கட்சியை கலைப்பது குறித்து தங்களை ஆலோ சிக்கவில்லை என கருத்துத் தெரி வித்த கேஆர்பிபி கட்சி நிர்வாகிகள் பலர் காங்கிரஸ் பக்கம் சாய்ந்துள்ள னர்.