புதுதில்லி, ஜன.10-
பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகள் 11 பேரையும் மீண்டும் சிறைத்துறையிடம் ஆஜராகுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அவர்களில் 9 பேர் திடீரென தலைமறைவாகி விட்டதாக குஜராத் மாநிலத்தை ஆளும் பாஜக அரசு கூறியிருப்பது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தங்களால் விடுதலை செய்யப் பட்ட குற்றவாளிகளை, உச்ச நீதி மன்றமே உத்தரவிட்டாலும் மீண் டும் சிறைக்கு அனுப்பக் கூடாது என்ற பிடிவாதம் காரணமாக, ‘குற்ற வாளிகள் தலைமறைவாகி விட்டார் கள்’ என்பதாக குஜராத் பாஜக அரசே ஒரு நாடகத்தை அரங்கேற்று வதாக குற்றச்சாட்டுக்கள் எழுந் துள்ளன. 2002-ஆம் ஆண்டு 21 வயது பில் கிஸ் பானு உட்பட 5 பெண்கள் கும் பல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட் டதுடன், 3 வயது குழந்தை உட் பட 14 பேர் படுகொலை செய்யப் பட்ட வழக்கில், 11 குற்றவாளிகளுக்கு 2008 ஜனவரி 21 அன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித் தது.
ஆனால், இந்த 11 பேரையும், தண்டனைக்காலம் முடிவடை வதற்கு முன்பே 2022 ஆகஸ்ட் 15 அன்று குஜராத் மாநில பாஜக அரசு விடுதலை செய்தது. சிறையிலி ருந்து வெளியே வந்த அவர் களுக்கு பட்டாசு வெடித்தும், மாலை அணிவித்தும், இனிப்பு வழங்கியும் பெரும் வரவேற்பும் அளிக்கப்பட்டது. இதற்கு எதிராக பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், குஜராத் அரசு தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து குற்ற வாளிகளை விடுதலை செய்துள்ள தாக கூறி, அந்த 11 பேரின் விடு தலையையும் உச்சநீதிமன்றம் திங் களன்று அதிரடியாக ரத்து செய் தது. அத்துடன், குற்றவாளிகள் 11 பேரும், 2 வாரங்களுக்குள் சிறை நிர்வாகத்திடம் சரணடைய வேண் டும் என்றும் உத்தரவிட்டது.
இந்நிலையில்தான் 11 குற்ற வாளிகளில் 9 பேர் தலைமறைவாகி விட்டதாக குஜராத் மாநில பாஜக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தாஹோத் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பலராம் மீனா கூறுகையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகும் முன்னரே 11 குற்றவாளிகளின் சொந்த ஊரான சிங்வாட் பகுதி போலீஸ் கட்டுப்பாட்டில் வந்து விட்டது. ஆனாலும் குற்றவாளி களில் சிலர் வெளியே சென்றுள்ள னர். சிலர் எங்களது கண்காணிப்பில் தான் உள்ளனர்.
சிலர் எங்கே சென் றார்கள் என தெரியவில்லை என பலராம் மீனா தெரிவித்துள்ளார். குற்றவாளிகளில் ஒருவரான ராதேஷ்யாம் ஷா, கடந்த 15 மாதங் களாக வீட்டில் இல்லை என்று கூறிய அவரது தந்தை பகவான் தாஸ் ஷா கூறிய நிலையில், ராதேஷ் யாம் உட்பட கிட்டத்தட்ட அனைத்து குற்றவாளிகளும் ஞாயிற்றுக் கிழமை வரை பொதுவெளியில் தான் சுற்றிக் கொண்டிருந்தனர் என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். பிரதீப் மோடியா (57) என்ற குற்ற வாளியின் வீட்டின் முன்பு காவலில் உள்ள சப்-இன்ஸ்பெக்டர், திங் கட்கிழமை அதிகாலையில் பிரதீப் புறப்பட்டுச் சென்றதாகவும், அவர் தனது பைக்கை வீட்டிலேயே நிறுத்திவிட்டு சென்றிருப்பதால், அவர் விரைவில் திரும்பி வருவார் என்று எதிர்பார்ப்பதாகவும் நம் பிக்கையுடன்(!) தெரிவிக்கிறார்.
அதேபோல கோவிந்த் (55) என்ற குற்றவாளியின் தந்தை அகம் பாய் சதுர்பாய் ராவல் (87), தனது மகனை விட்டுவிடுமாறும், அவர் அயோத்தி ராமர் கோவிலில் சேவை செய்ய உள்ளதாகவும் வேண்டு கோள் விடுத்துள்ளார். ஆனால், இவை அனைத்தும் குஜராத் பாஜக அரசின் துணையுடன் உச்ச நீதி மன்றத்தை ஏமாற்றும் செயல் என்று சமூக செயற்பாட்டாளர்கள் தெரி விக்கின்றனர்.