india

img

பூடானில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்து - 2 விமானிகள் பலி

பூடானில் இந்திய ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானதில் 2 விமானிகள் உயிரிழந்தனர்.

இந்திய ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டு சென்றபோது, கிழக்கு பூடான் அருகே உள்ள யோன்பிலோ என்ற இடத்தில் மலை ஒன்றில் மோதி ஹெலிகாப்டர் விபத்துள்ளானது. இதில் ஹெலிகாப்டரில் பயணித்த 2 விமானிகளும் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து மதியம் சுமார் 1 மணியளவில் நடந்துள்ளதாக இந்திய ராணுவ செய்தி தொடர்பாளர் கொலோனல் அமன் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் உயிரிழந்த இரு விமானிகளில் ஒருவர் இந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் கொலோனல் பதவியில் இருந்தவர், மற்றொருவர் இந்திய ராணுவத்துடன் பயிற்சி பெறும் பூடான் ராணுவத்தை சேர்ந்த விமானி என்பது குறிப்பிடத்தக்கது.
 

;