பாஜகவின் அரசியல் ஆதாயப் பொருளான ராமர் கோவில் அமைந் துள்ள அயோத்தி நகரம் பைசா பாத் மக்களவை தொகுதிக்கு உட் பட்டது. பைசாபாத் தங்களது கோட்டை என பாஜக மார்தட்டிக் கொள்வது வழக்கமானது. இந் நிலையில், பிரதமர் மோடி ராமரை பாதுகாக்க பைசாபாத்தை பாஜக விற்கு கொடுங்கள் என்று கூறி மக்க ளவை தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது சிறப்பு பூஜை எல்லாம் மேற்கொண் டார். “உயர்” சாதியினர் அதிகம் வாழும் மக்களவை தொகுதி என்று கூறப்படும் பைசாபாத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த அவதேஷ் பிரசாத்தை “இந்தியா” கூட்டணி வேட்பாளராக களமிறக்கி 54,567 வாக்குகள் வித்தியாசத்தில், பைசா பாத்தில் தொடர்ந்து 2 முறை எம்.பி. யாக இருந்த பாஜகவின் லல்லு சிங்கை வீழ்த்தியது சமாஜ்வாதி.
இந்நிலையில், அயோத்தியை தட்டி தூக்கிய தலித் எம்.பி.க்கு, நாடாளுமன்றத்தில் நடந்த பதவி யேற்பு விழாவின் பொழுது முன்வரி சையில் மரியாதை அளித்தது “இந் தியா” கூட்டணி. அதாவது காங்கி ரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ், திமுக மூத்த தலைவர் டி.ஆர்.பாலு விற்கு அருகே அமர்ந்து இருந்தார் அவதேஷ் பிரசாத். பதவியேற்ற “இந்தியா” கூட்டணி எம்.பி.க்களில் பெரும்பாலானோர் அவதேஷ் பிர சாத்திற்கு வணக்கம் வைத்து மரி யாதை செலுத்தினர். ஆனால் நிமிர்ந்து கூட பார்க்காமல் பாஜக எம்.பி.க்கள் தலைகுனிந்தபடியே இருந்தனர்.