india

img

தொடர்ந்து 4 நாட்கள் இரவுப் பணி

புதுதில்லி, ஜூன் 29- இந்திய ஒன்றிய ரயில்வே துறையின் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மது ரைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், திண்டுக்கல் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சச்சி தானந்தம் ஆகிய இருவரும் நேரில் சந்தித்தனர்.

அப்போது, இந்திய இரயில்வேயில் கடந்த ஆண்டு (2022-23) மட்டும் 51 ஆயி ரத்து 888 சிக்னல்கள் செயலிழந்துள்ள நிலைமையும், ரயில் ஓட்டுநர்களுக்கு போதுமான ஒய்வு வழங்கப்படாமல் பணி  செய்ய நிர்ப்பந்திப்பதால் விபத்துக்கள் அதிகரிப்பதையும் சுட்டிக்காட்டி, இதில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சு.வெங்கடேசன், ஆர்.  சச்சிதானந்தம் ஆகியோர் ஊடகங்க ளுக்கு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உடனான சந்  திப்பில், இந்திய ரயில்வேயில் உள்ள லோகோ பைலட்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்புப் பிரச்சனைகளையும், தெற்கு ரயில்வேயில் உள்ள லோகோ பைலட்களின் போராட்டத்தையும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். 

இந்திய ரயில்வேயில் மோதல்கள் உட்பட சமீபத்திய விபத்துக்களுக்கு பிற  காரணங்களுடன் மனிதத்தவறு காரண மாக சுட்டிக் காட்டப்படும் வேளையில் லோகோ பைலட்டுகளின் பணி நிலைமை களை சரிசெய்ய வேண்டிய அவசரத் தேவை ஏற்பட்டுள்ளது.

பெரும்பாலும் சரக்கு ரயில் லோகோ  பைலட்டுகள் ஒரு நாளைக்கு 14 முதல் 16  மணி நேரம் வேலை செய்கிறார்கள்; 3 அல்லது 4 நாட்கள் கழித்து வீடு திரும்பு கிறார்கள்; தொடர்ந்து 4 இரவுகளுக்கு மேல் வேலை செய்கிறார்கள், அதன் பிறகும் வாராந்திர ஓய்வு சரியாக வழங்கப்  படுவதில்லை. 

தலைமையகத்தில் ஓய்வு இல்லாத தால், சிவப்பு சிக்னலை கடக்கும் (சிக்னல்  பாஸிங் அட் டேஞ்சர், SPAD) நிகழ்ச்சிக்கு  வழிவகுக்கிறது, இது மோதல்களுக்கு இரண்டாம் காரணம். 

சிக்னல் செயலிழப்பும் முதன்மைக் காரணம். இந்திய ரயில்வேயில்  2022 -23 இல் மட்டும் 51 ஆயிரத்து 888 சிக்னல்  கள் செயலிழந்து உள்ளன.

வேலை நேரம்

ஒரு நாளைக்கு 8 மணி நேரப் பணி என்பதை உறுதிப்படுத்தும் ஐஎல்ஓ மாநாடு முடிந்து 105 ஆண்டுகளுக்குப் பிறகும் லோகோ பைலட்டுகளுக்கு 8  மணி நேரப் பணியும், வாராந்திர ஓய் வும் கானல் நீராக உள்ளது. ரயில்வே வாரி யத்தின் 1968-ஆம் ஆண்டு உத்தரவில், ரன்னிங் ஊழியர்களின் வேலை நேரம் 14 மணிநேரத்திற்கு மிகாமல் இருக்க  வேண்டும் என்று கூறியது. ஆனால் இன்ன மும் அது எட்டாக்கனியாகவே உள்ளது. விசாகப்பட்டினம் விபத்து குறித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் தனது அறிக்கையில், “ஊழியர்கள் நான்கு இரவு கள் தொடர்ந்து பணியாற்றுவது பாது காப்பற்றது” என்று கூறியுள்ளார்.

தொட ர்ச்சியான இரவுகள் இரண்டாக மட்டுமே  பணியில் இருக்க வேண்டும் என்று அவர்  பரிந்துரைத்தார். லோகோ பைலட்டுகள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை கருத்  தில் கொண்டு, தெற்கு ரயில்வே லோகோ  பைலட்டுகள் தொடர் இரவுப்பணியை இரண்டாகக் குறைக்க கோரிக்கை விடுத்  துள்ளனர். அனைத்து ஊழியர்களுக்கும் வாராந்திர ஓய்வுக்கு உரிமை உண்டு.

அதேசமயம் லோகோ பைலட்டுகளுக்கு வாராந்திர ஓய்வுக்கு உரிமை இல்லை. அவர்களுக்கு ஒரு மாதத்திற்கு நான்கு முறை 30 மணிநேரம் ஓய்வு கொடுப்பது நல்லது. அது ஊழியர்களின் உரிமை மற்றும் பயணிகளின் நலன் சார்ந்தது. ஆனால் விதியிலேயே பத்து நாளைக்கு ஒரு முறை ஓய்வு கொடுத்தால் போதும்  என்று சொல்லப்பட்டுள்ளது. முழுமை யான உண்மையான ஓய்வு என்பது பணி  முடிந்த 16 மணிநேரத்திற்கு பிறகு தொடர்ந்து  30 மணிநேரமாக இருக்க வேண்டும்.  அதாவது பாதுகாப்பை உறுதி செய்வ தற்காக, தலைமையக ஓய்வு 16 மணி நேரம் கழிந்த பிறகு, அவர்களுக்கு தொட ர்ந்து 30 மணி நேரம் ஓய்வு அளிக்கப்பட  வேண்டும்,

இது ரயில், லோகோ பைலட் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி  செய்யும். அண்மையில் நடந்த மேற்குவங்க ரயில் மோதலில் கூட சரக்கு ரயில் ஓட்டு நர்  நான்கு இரவுகள் தொடர்ந்து வேலை  பார்த்து வெறும், முப்பது மணி நேர ஓய்வு மட்டும் எடுத்து வேலைக்கு வந்தது  தெரிகிறது. இது போதுமான ஓய்வு இல்லை என்பதை விபத்துகள் தொடர்ந்து  உறுதிப்படுத்தி வருகின்றன.

முக்கிய பாதுகாப்பு நடவடிக்கை களை செயல்படுத்துவதில் நிர்வாகம் காட்  டும் தொடர்ந்த அலட்சியத்தை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வேயின் லோகோ  பைலட்கள் போராட்டம் நடத்தி வருகின்ற னர். நிர்வாகத்தின் பாதுகாப்பற்ற அறி வுறுத்தல்களின்படி அவர்கள் பணி புரிந்தால், விபத்துகளினால் பயணி களின் உயிரிழப்பு மற்றும் தங்களின் உயி ரையும் இழக்கிறார்கள்.

அவர்கள் உயிரு டன் இருந்தால், அவர்களுக்கு பணி நீக்கம் தண்டனையாக விதிக்கப்படுகிறது. தற்போது தெற்கு ரயில்வேயில் பாது காப்பு விதிமுறைகளைப் பின்பற்றிய பல  லோகோ பைலட்கள் இடமாற்றம், இடை நீக்கம், பெரிய மற்றும் சிறிய தண்டனை  குற்றப் பத்திரிகைகளால் தண்டிக்கப்படு கிறார்கள். போராடும் ஏஐஎல்ஆர்எஸ்ஏ (AILRSA) தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த பொது மேலாளரை வழி நடத்துவது தவிர, மனிதத் தவறுக்கான காரணத்தை நீக்கி பாதுகாப்பை உறுதி செய்ய தயவுசெய்து தலையிட்டு தேவை யான நடவடிக்கைகளை எடுக்குமாறு  அமைச்சரிடம் கேட்டுக் கொண்டுள் ளோம்.

இவ்வாறு அவர்கள் தங்களின் அறிக்  கையில் குறிப்பிட்டுள்ளனர்.
 

;