india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், தில்லி, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசத்தின் சில பகுதிகளில் அடுத்த ஐந்து நாள்களுக்கு அடர்த்தியான மற்றும் மிகவும் அடர்த்தியான பனிமூட்டம் தொடர்ந்து நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. முக்கியமாக வடமாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு குறைந்தபட்ச வெப்பநிலை 3-7 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என இந்திய  வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரா தலைநகர் மும்பை சத்ரபதி விமான நிலையத்தில் ரூ.40 கோடி மதிப்புள்ள கோகைன் போதைப்பொருளை கடத்தி வந்த தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண்ணை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் கைது செய்தனர்.

ராகுல் காந்தியின் “பாரத் நியாய யாத்திரை” மணிப்பூர் தலைநகர் இம்பாலுக்கு பதிலாக, அம்மாநிலத்தின் தவுபால் பகுதியில் உள்ள ஒரு தனியார் மைதானத்தில் ஜன.14 அன்று தொடங்குகிறது.

குளிர்கால கூட்டத்தொடரில் மக்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் விஜய் வசந்த், ஜெயக்குமார், அப்துல் காலித் ஆகிய 3 பேர் நாடாளுமன்ற உரிமை மீறல் குழு முன்பு வெள்ளியன்று ஆஜராகினர்.

ஒடிசாவில் 2023 டிசம்பர் வரை எம்.பி, எம்எல்ஏக்கள் மீது 423 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக அம்மாநில உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் ஓடும் லாரியை வழிமறித்து ரூ.2.38 கோடி மதிப்புள்ள துணிகளை இரண்டு பேர் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2016இல் 29 பேருடன் சென்று வங்கக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான இந்திய விமானப் படையின் ஏஎன்-32 விமானத்தின் சேதமடைந்த பாகங்கள் சென்னைக்கு அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாட்டின் மிகப்பெரிய கடல் பாலமான மும்பையில் உள்ள டிரான்ஸ் ஹார்பர் இணைப்பு பாலத்தை (16.5 கிமீ) பிரதமர் மோடி மகாராஷ்டிரத்தில் வெள்ளியன்று திறந்துவைத்தார். ரூ.17,840 கோடி செலவில்  கட்டப்பட்டுள்ள  இப்பாலம் மும்பையிலிருந்து புனே, கோவா மற்றும் தென்னிந்தியாவிற்கான பயண நேரத்தை குறைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தில்லி
உத்தரப்பிரதேச
பாஜக அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகரில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த  ஆண்டு ஒன்றில் ஆசிரியர் ஒருவர் முஸ்லிம் மாணவரை சக மாண வர்களை வைத்து அடிக்கச் செய்த சம்பவம் தொடர்பான வழக்கு உச்சநீதி மன்றத்தில் வெள்ளியன்று நீதிபதி ஓகா தலைமையிலான அமர்வில் விசா ரணைக்கு வந்தது. விசாரணையின் பொழுது நீதிபதி ஓகா,”எதிர்பார்ப்புகளை உத்தரப்பிரதேச அரசு நிறை வேற்றாததால் இதுபோன்ற சம்பவம் அரங்கேறுகிறது. இந்தச் சம்பவம் நடந்த விதம் குறித்து அரசு மிகுந்த அக்கறை யுடன் இருக்க வேண்டும்” என உத்தரப் பிரதேச மாநில அரசு வழக்கறிஞரை நேரடியாக கண்டித்துள்ளார். அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் “சம்பவம் நடைபெற்றது தனியார் பள்ளி.  அரசு பள்ளி கிடையாது” எனக் கூறினார்.  ஆனால் அவரது வாதத்தை உச்சநீதி மன்ற நீதிபதி ஓகா ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.