india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

கேரளாவின் உரிமைப் போராட்டத்திற்கு ஆதரவாக...

மாநில உரிமைகள் மீது தாக்குதல் நடத்தி, உரிமைகளை பறித்து, கூட்டாட்சி முறைக்கு எதிராகச் செயல்படும் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்தும் மாநில நிர்வாகத்தில் ஆளுநரின் அத்துமீறிய நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பிப்ரவரி 8 வியாழக்கிழமையன்று தில்லியில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அம்மாநில அரசு மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டது. இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, சிஐடியு தமிழ்நாடு மாநிலக் குழு சார்பில் திருச்சி உறையூரில் ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.  திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ரெங்கராஜன் தலைமை வகித்தார். மாநிலப் பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன், உதவிப் பொதுச் செயலாளர்கள் கே.சி.கோபிகுமார், க.திருச்செல்வன், மாநில துணைத்தலைவர் சந்திரன் ஆகியோர் உரையாற்றினர்.

சிபிஎம் தேர்தல் நிதியளிப்பு

கன்னியாகுமரி மாவட்டம் சுவாமியார்மடத்தில் புதனன்று நடைபெற்ற தோழர் ஜே.ஹேமச்சந்திரன் 16 ஆவது ஆண்டு நினைவு தினப் பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல்கட்ட தேர்தல் நிதியாக மக்களிடம் திரட்டிய ரூ.5 லட்சத்தை மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகியிடம் மாவட்டச் செயலாளர் ஆர்.செல்லசுவாமி வழங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் மற்றும் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் உடனுள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் கடலூர் மாவட்டக்குழு சார்பில் தேர்தல் நிதியாக ரூ. 5 லட்சத்தை மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், வியாழனன்று நடைபெற்ற நிகழ்வில் வழங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.மருதவாணன்,  ஜெ.ராஜேஷ் கண்ணன், வி.சுப்பராயன்,  மாநகர செயலாளர்  ஆர்.அமர்நாத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.