“இந்தியா” கூட்டணி யின் எழுச்சியால் மிரண்டுள்ள பாஜக, கடந்த தேர்தலை போன்று வெற்றி சாத்தியமில்லை என் பதை உணர்ந்து 40 தொகுதி களை கொண்ட பீகார் மாநி லத்தில் போதுமான அளவில் தொகுதிகளை கைப்பற்ற நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தை (ஜேடியு) தங்கள் பக் கம் வளைத்தது. தற்போது பீகார் தேசிய ஜனநாயக கூட்ட ணிக்குள் பாஜக - ஜேடியு - எச்ஏஎம் (மஞ்சி கட்சி) - ராஷ்டி ரிய லோக் சம்தா (குஷ்வாஹா) - லோக் ஜனசக்தி (சிராக் பஸ் வான்) - ராஷ்ட்ரிய லோக் ஜன சக்தி (பசுபதி பரஸ்) ஆகிய கட்சி கள் உள்ளன.
பாஜக முதற்கட்ட வேட்பா ளர் பட்டியலை வெளியிட்ட சூழ லில் பீகாரில் இன்னும் கூட்டணி கட்சிகளுக்கு இடையேயான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை கூட தொடங்கவில்லை.
காரணம் பீகார் தேசிய ஜன நாயக கூட்டணிக்குள் தொகுதி பங்கீடு தொடர்பாக முட்டல் மோதல்கள் அரங்கேறி வரு கின்றன. மொத்தமுள்ள 40 தொகுதிகளில் பாஜக 20 தொகு திகளுக்கு மேல் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளது. ஐக்கிய ஜனதா தளம் 12 தொகு திகளுக்கு மேல் போட்டியிட தயாராகி வருகின்றது. மீத முள்ள 8 தொகுதிகளில் 6 தொகு திகளை லோக் ஜனசக்தி (சிராக் பஸ்வான்) கேட்கிறது. லோக் ஜனசக்தி கட்சிக்கு கொடுப்பது போன்று தங்களுக்கும் 6 தொகுதி வேண்டும் என ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி (பசுபதி பரஸ்) கட்சி கேட்கிறது. எச்ஏஎம், ராஷ்டிரிய லோக் சம்தா ஆகிய கட்சிகள் 3 இடங்கள் வேண்டும் என கங்கணம் கட்டி வருகின்றன. இந்த கட்சிகளுக்கு அதிக சீட் களை கொடுக்க பாஜக விரும்ப வில்லை.
பீகாரில் காங்கிரஸ் - ஆர்ஜேடி - இடதுசாரிகள் என “இந்தியா” கூட்டணி மிக பிரம் மாண்டமாக இருப்பதால், சமா ளிப்பது கடினம் என்று கூறி சிறிய கட்சிகளுக்கு ஜேடியு விடம் குறிப்பிட்ட தொகுதி களை பகிர்ந்து அளிக்குமாறு பாஜக கூறியது. ஆனால் ஜேடியு மறுப்பு தெரிவிக்கவே, பீகார் தேசிய ஜனநாயக கூட்ட ணிக்குள் உச்சகட்ட குழப்பம் நிலவி வருகிறது.
“இந்தியா” கூட்டணிக்கு தாவ
சிராக் பஸ்வான் திட்டம்?
கடந்த முறையை போலவே இம்முறையும் 6 தொகுதி வேண்டும் என பிடிவாதமாக இருக்கும் சிராக் பஸ்வான் தனது தந்தையின் (ராம் விலாஸ்) தொகுதியான ஹாஜிப்பூரில் போட்டியிட பாஜகவிடம் விருப்பம் தெரிவித்துள்ளார். ராம் விலாஸ் பஸ்வானின் தம்பி பசுபதி பரசும் ஹாஜிப்பூரில் போட்டி யிட விருப்பம் தெரிவித்துள்ளார். ஒரே தொகுதிக்கு இரு கட்சித் தலைவர்கள் போட்டியிட விருப்பம் தெரிவிப்பதால் என்ன செய்வது என பாஜக விழித்து வருகிறது. ஹாஜிப்பூர் தொகுதி தரவில்லை என்றால் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேற சிராக் பஸ்வான் மற்றும் பசுபதி பரஸ் தயாராக உள்ளனர். மேலும் 6 தொகுதிகளை அளிக்காவிட்டால் “இந்தியா” கூட்டணியில் இணைய சிராக் பஸ்வான் தயாராக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.