india

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சிறைகளில் சாதிய பாகுபாடு இருந்தால் மாநில அரசுகள்தான் பொறுப்பேற்க வேண்டும் 

உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

‘சிறைகளில் சாதியப் பாகுபாடு காட்டக்கூடாது. அங்கு சாதியப் பாகுபாடு இருந்தால் மாநில அரசுகள் தான் பொறுப்பேற்க வேண்டும்’ என உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தர விட்டனர்.

11 மாநில சிறைகளில் சாதிய ரீதியி லான அணுகுமுறை விதிகளை ரத்து செய்யக் கோரி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை, வியாழனன்று(அக்.3) உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பார்தி வாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து தீர்ப்பு வழ ங்கியது. அதில், சிறைகளில் சாதியை வைத்து பாகுபாடு காட்டக்கூடாது. சிறை களில் சாதிய பாகுபாடு இருந்தால் மாநில அரசுகள்தான் பொறுப்பேற்க வேண்டும்.  எஸ்.சி., எஸ்.டி. உள்ளிட்ட விளிம்பு நிலை மக்களை சிறைகளில் பாகுபாடுடன் நடத்தக்கூடாது. தண்டனை குறைப்பு, சுத்தம் செய்வது, சமையல் செய்வது போன்ற பணிகளில் சாதியப் பாகுபாடு காட்டக் கூடாது. சிறை விதிகளை 3 மாதத் தில் மாற்றி அமைக்க ஒன்றிய மற்றும் அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிடுகிறது என்று கூறிய உச்சநீதிமன்ற நீதிபதிகள், குறிப்பிட்ட மாநிலங்களின் சிறைச்சாலை விதிகள் அரசியல் சாசனத்திற்கு முரணாக உள்ளன என்பதால் தற்போதைய தீர்ப் பின்படி சிறை விதிகளில் மாற்றம் செய்ய  மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டனர்.

தில்லியில் 560 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல்

தெற்கு தில்லியில் 560 கிலோ கோகைன் போதைப் பொரு ளை காவல்துறை  பறிமுதல் செய்துள்ளது.

இவற்றின் மதிப்பு ரூ.2,000 கோடிக்கும் மேல் இருக்கும் என மதிப்பிடப்பட் டுள்ளது. இந்த வழக்கில் கைதானவர்கள் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த அகதிகள் என்றும் இவர்கள் சர்வதேச அளவில் போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடையவர்கள் என்றும், மணிப்பூர் மற்றும் இதர நான்கு மாநிலங்களில் இருந்து தில்லிக்கு போதைப் பொருட் களை கடத்தி விற்பனை செய்துள்ளதா கவும் தெரிவித்தனர்.