india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்  களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம்  வழங்கும் மகாலட்சுமி திட்டம் செயல்படுத்தப் படும். அங்கன்வாடி, ஆஷா, மதிய உணவு திட்ட  பணியாளர்களுக்கான மாத ஊதியம் இரட்டிப்பா கும். ஒன்றிய அரசு வேலைகளில் பெண்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்படும். வேலைக்கு செல்லும் பெண்களுக்காக மாவட்டத்துக்கு ஒரு சாவித்ரி பாய் புலே விடுதி அமைக்கப்படும். ஒவ்  வொரு பஞ்சாயத்திலும் பெண் அதிகாரி ஒருவர்  நியமிக்கப்படுவார் என காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜுன கார்கே வாக்குறுதி அளித்துள்ளார். 

மக்களவை தேர்தல் நெருங்கியுள்ளதால் பாஜக  ஆள்பிடி வேலைகளில் தீவிரமாக களமிறங்கி யுள்ள நிலையில், உத்தரப்பிரதேச மாநில மூத்த காங்கிரஸ் தலைவர் அஜய் கபூர் புதனன்று பாஜக வுக்கு தாவினார்.

மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்  தலை நடத்த தயாராக உள்ளோம். அதற்கான  பணிகள் முழுவீச்சுடன் நடைபெற்று வருகிறது. போலிச் செய்திகள் பரவுவதை தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் சமூக ஊடகப் பிரிவு ஏற்படுத்தப்  படும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறினார்
 

அமலாக்கத்துறை அதிகாரிகள் தனது வீட்டில்  சோதனை நடத்திய போது ஒரே இடத்தில்  மணிக்கணக்கில் நிற்க வைத்து கொடுமைப்படுத்தி யதாக ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் எம்எல்ஏ குற்றம்சாட்டியுள்ளார்.

ஹரியானா முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

அமெரிக்காவில் சட்ட மேற்படிப்பிற்கு உத வித்தொகை பெற்றுள்ள உச்சநீதிமன்ற சமையல் பணியாளரின் மகளை, நேரில் அழைத்து  உச்சநீதிமன்ற நீதிபதிகள் பாராட்டுத் தெரிவித்துள்ள னர்.

மேற்குவங்கத்தில் தேர்தலில் போட்டியிட சீட் வழங்காததால் போர்க்கொடி தூக்கிய  சகோதரருடன் எந்த உறவுமில்லை என திரிணா முல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி அறி வித்துள்ளார்.

நகைக் கடன் நடைமுறைகளை மறு மதிப்பீடு செய்யுமாறு பொதுத்துறை வங்கிகளுக்கு ஒன்றிய நிதி அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

புதுதில்லி
உள்துறை அமைச்சக எச்சரிக்கையால் பதற்றம்

18-ஆவது மக்களவைத் தேர்த லுக்கான தேதி இன்னும் ஒரு சில தினங்களில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில், அமித் ஷாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஒன்றிய உள்துறை அமைச்சகம் புதனன்று மாநிலங்களுக்கு கொடுத்த திடீர் எச்சரிக்கையால் நாடு முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. 

அனைத்து மாநிலங்களுக்கும் ஒன்றிய உள்துறை அமைச்சகம் விடுத் துள்ள இந்த அறிவுறுத்தலில்,”தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பயங்கரவாத அமைப்புகள் தாக்குதலில் ஈடுபடலாம் என உள்துறை அமைச்சகத்துக்கு தக வல்கள் கிடைத்துள்ளன. அதனால் அனைத்து மாநிலங்களிலும் பாது காப்பை பலப்படுத்த வேண்டும். முக்கிய மாக பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிர முகர்கள் கலந்து கொள்ளும் கூட்டங்க ளில் பாதுகாப்பை பலப்படுத்தவும், முக்  கிய இடங்களில் வெடிகுண்டு தடுப்பு  பிரிவு மற்றும் மோப்ப நாய் கொண்டு பாது காப்பை உறுதி செய்து கண்காணிக்கவும் வேண்டும்” என உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

புதுதில்லி
ரூ.105 கோடி வருமான வரி விவகாரம்
காங்கிரஸ் மனு தள்ளுபடி

2018-19 நிதி ஆண்டில் வரு மான வரித்துறைக்கு  செலுத்த வேண்டிய தொகையான ரூ.105 கோடியை உடனடி யாக செலுத்த வேண்டும் என கடந்த பிப்ரவரி 13 அன்று காங்கிரஸ் கட்சிக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பி யது. இந்த நடவடிக்கைக்கு தடை கோரி  காங்கிரஸ் கட்சி வருமானவரி மேல்முறை யீட்டு தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்தது. இந்த மனு மார்ச் 8 அன்று தள்ளு படி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து  காங்கிரஸ் கட்சி தில்லி உயர்நீதிமன்றத் தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனு  நீதிபதி யஷ்வந்த் வர்மா தலைமையி லான அமர்வு முன்பு புதனன்று விசா ரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த  நீதிபதி, “வருமான வரி மேல் முறையீட்டு  தீர்ப்பாயம் வழங்கிய உத்தரவில் தலை யிட எந்த ஆதாரமும் இல்லை. எனவே, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக கடந்த மாதம் இதே வரு மானவரி நிலுவை காரணமாக காங்கி ரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்  கப்பட்டன. இளைஞர் காங்கிரஸ் மற்றும்  மாணவர் காங்கிரஸ் வங்கிக் கணக்கு களில் இருந்து ரூ.65 கோடியை அரசுக்கு  மாற்ற வருமான வரித்துறை வங்கி களை கட்டாயப்படுத்தியது என காங்கி ரஸ் பொருளாளர் அஜய் மக்கான் குற்றம்  சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.