india

img

மசூதி திறப்பு விழாவிற்கு சீர்வரிசை செய்த இந்துக்கள், கிறிஸ்துவர்கள்

சிவகங்கை மாவட்டம் சாலைகிராமம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள “மஸ்ஜிதே இலாஹி” என்ற மசூதி திறப்பு விழாவுக்கு இந்துக்கள், கிறிஸ்துவர்கள் சீர்வரிசையோடு சென்று விழாவை சிறப்பித்தனர். “புதிய இறை இல்லத் திறப்பு விழா சிறக்க வாழ்த்துகிறோம்.” என ஸ்ரீ ஐயப்பா சேவா சங்கமும், “எங்கள் உறவுகளின் புதிய இறையில்லத் திறப்பு விழாவிற்கு வருகை தரும் அனைவரையும் வருக வருக என அன்புடன் அழைக்கிறோம்.” என சாலைக் கிராம புனித சகாய அன்னை ஆலய இளையோர் அமைப்பினரும் வாழ்த்து பேனர் வைத்து மதநல்லிணக்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.