மறுமலர்ச்சி மனிதநேய வாதி, ஆங்கில வழக்கறிஞர், சமூக தத்துவாதி, எழுத்தாளர் என அழைக்கப்பட்டவர் சர் தாமஸ் மூர். இவர் 1478 பிப்ரவரி 7 அன்று இங்கிலாந்தில் கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தார்.
தந்தையின் விருப்பத் தை மீறி சட்டம் பயின்று, தன் வருவாயை ஏழை களுக்காகவே செலவிட்டார். இவர் இங்கிலாந்து மன்னர் ஹென்றியின் முக்கிய கவுன்சிலராக திகழ்ந்தவர்.
1516 இல் பொதுவுடமைக் கொள்கையை மையமாக வைத்து “உட்டோபியா” (தமிழில் - கற்பனைத் தீவு) எனும் நூலை எழுதினார் தாமஸ் மூர். இந்நூல் சோசலிசத்தை முன்னிறுத்தும் வகையில் அமைந்திருக்கும். அரசியலமைப்புச் சட்டம் குறித்து எழுதப்பட்ட சிறந்த புத்தகங்களில் ஒன்றாக இந்நூல் திகழ்கிறது. இந்நூலில் வரும் கற்பனை தீவு எல்லா நன்மைகளும் நிறைந்ததாக இருக்கும். இதனை மார்க்சும் ஏங்கெல்சும் ‘உட்டோபியன் சோசலிசம்’ என்பர். ரஷ்யப் புரட்சிக்கு வித்திட்ட சிந்தனையாளர்களின் பட்டியலில், மாமேதை லெனின் இவரையும் சேர்த்திருப்பார்.
இங்கிலாந்து இளவரசரின் ஆடம்பர திருமணத்தை எதிர்த்ததால், தாமஸ் மூரை கொலை செய்ய மன்னர் ஹென்றி ஆணை பிறப்பித்தார். இதனால் 1535 ஜூலை 6 அன்று தாமஸ் மூர் தலைதுண்டித்து கொல்லப்பட்டார்.
தாமஸ் மூர் ‘உட்டோபியா’ நூலில் வரைந்து காட்டிய கற்பனாவாத சோசலிசம் அவரோடு முடியவில்லை. அது இன்னும் தொடர்கிறது.