சென்னை,பிப்.10- இன்சாட் 3டி எஸ் செயற் கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி எஃப்-14 ராக்கெட் பிப்.17 அன்று விண்ணில் செலுத்தப் பட உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. நமது நாட்டுக்கு முக்கிய தேவையான தொலைத் தொடர்பு, தொலை உணர்வு, வழிகாட்டுதல் செயற்கைக் கோள்களை பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ராக்கெட்கள் மூலம் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) விண்ணில் நிலை நிறுத்தி வரு கிறது.
விண்வெளி ஆராய்ச்சி யில் பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது. இதற்கிடையே, உலகளா விய பருவநிலை மாற்றம் தற்போது பெரும் அச்சுறுத் தலாக மாறி வருகிறது. புயல், கனமழை போன்ற இயற்கை சீற்றங்களின் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இதை கருத்தில் கொண்டு, வானிலை மாறுபாடுகளை கண்காணித்து பேரிடர் காலங் களில் உதவுவதற்காக இஸ்ரோ சார்பில் இன்சாட் வகை செயற்கைக் கோள்கள் விண்ணில் நிலை நிறுத்தப் பட்டு வருகின்றன.
அந்த வகையில், வானிலை ஆய்வுக்கான அதி நவீன இன்சாட்-3டிஎஸ் எனும் செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள் ளது. இது ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத் தில் இருந்து ஜிஎஸ்எல்வி-எஃப்14 ராக்கெட் மூலம் பிப்.17 அன்று விண்ணில் செலுத்தப் பட உள்ளது.
இன்சாட்-3டிஎஸ் செயற் கைக்கோள் மொத்தம் 2,275 கிலோ எடை கொண்டது. இதில் உள்ள 6 இமேஜிங் சேனல்கள் உள்பட 25 விதமான ஆய்வுக் கருவி கள், புவியின் பருவநிலை மாறுபாடுகளை உன்னிப்பாக கண்காணித்து வானிலைத் தகவல்களை துல்லியமாக வழங்கும். வானிலை மாறுபாடுகள் கண்காணித்து பேரிடர் காலங்களில் உதவுவதற்காக ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள இன்சாட்-3டி செயற் கைக்கோளின் தொடர்ச்சி யாக இன்சாட் 3 டிஎஸ் அனுப் பப்படுகிறது.