india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

“கோவிஷீல்டு” தடுப்பூசியால் பக்க விளைவு ஏற்படும் என தகவல் வெளி யாகி வரும் நிலையில், “கோவாக்சின்” தடுப்பூசி பாது காப்பானது என பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. 

மதுபான கொள்கை தொடர்பான வழக்கில் சிறையில் உள்ள தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மேல்முறையீட்டு மனு, வெள்ளியன்று அவசர வழக்காக தில்லி உயர்நீதிமன்றம் விசாரிக்க உள்ளது. 

மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் குற்  றச்சாட்டுக்கு ஆளான பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு பதிலாக, அவரது மகனை கைசர்கஞ்ச் தொகுதியில் நிறுத்த பாஜக முடிவு  செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாஜக ஆளும் வன்முறை பூமியான மணிப்பூர் மாநிலத்தின் சுராசந்த்பூர் பகுதி யில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளை ஒன்றுக்குள்  புகுந்த துப்பாக்கி ஏந்திய நபர்கள், 20 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்துவிட்டு சென்  றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தேசிய தேர்வு முகமை அதன் அதிகாரப்பூர்வ இணையதளமான exams.nta.ac.in மற்றும் neet.ntaonline.in இல் வெளியிடப்பட்டுள்ளது. நீட் நுழைவுத் தேர்வு மே 5 அன்று இந்தியாவில் உள்ள 571 நகரங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள 14 நகரங்களில் நடத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகரிக்கும் வெயில் காரணமாக கேரளா வில் கல்வி நிறுவனங்களுக்கு மே 6 வரை  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில பேரிடர்  மேலாண்மை கூட்டத்துக்கு பின் கேரள அரசு  இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில், காலை 11 மணி முதல் 3 மணி வரை கோடைகால  விடுமுறை வகுப்புகளை நடத்தவும், காவல்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட வீரர்கள் பகல் நேரத்  தில் அணிவகுப்பு ஒத்திகை நடத்த வேண்டாம் என  அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விஜயவாடா
ஆந்திராவில் அதிர்ச்சி 4 கண்டெய்னர்களில் ரூ.2000 கோடி பறிமுதல்

நாடு முழுவதும் மக்களவை தேர்த லுக்கான கட்டுப்பாடுகள் நடை முறையில் உள்ள நிலையில்,  ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்  படும் பணம், தங்கம், பரிசுப்பொருட்களை அந்தந்த மாநிலங்களின் தேர்தல் பறக் கும் படையினர் பறிமுதல் செய்து வரு கின்றனர். 

இந்நிலையில், ஆந்திர மாநிலம் அனந்தபுரமு மாவட்டத்தில் உள்ள கஜ்  ராம்பள்ளியில் சோதனைச் சாவடியில்   அதிவேகமாக வந்த 4 கண்டெய்னர் களை தேர்தல் பறக்கும் படையினர்  வழிமறித்து சோதனை செய்தனர். இந்த  சோதனையில் 4 கண்டெய்னர்களிலும் கட்டுக்கட்டாக ரூ.2,000 கோடி பணம் பறி முதல் செய்யப்பட்டது. கேரள மாநிலம் கொச்சியில் இருந்து தெலுங்கானா மாநி லம் ஹைதராபாத்திற்கு கொண்டு சென்ற தாக விசாரணையில் தகவல் வெளியாகி யுள்ளது. 

புதுதில்லி
“டீப் பேக்” வீடியோக்களுக்கு தடை விதிக்க தில்லி உயர்நீதிமன்றம் மறுப்பு

தில்லி உயர்நீதிமன்றத்தில் “வழக்க றிஞர்களின் குரல்” என்ற அமைப்பு, “மக்களவை தேர்தலில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கி ரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி மற்றும்  நடிகர், நடிகைகள் மூலம் “டீப் பேக்”  வீடியோக்களை (போலி) கொண்டு தவ றான தகவல்களை பரப்புகின்றனர். இதனை தடுக்க தேர்தல் ஆணையத் திற்கு உத்தரவிட வேண்டும்” என மனு தாக்கல் செய்தது. 

இந்த மனு தில்லி உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி மன் மோகன் தலைமையிலான அமர்வில் வியா ழனன்று விசாரணைக்கு வந்த நிலையில்,  “டீப் பேக்” வீடியோக்களை யார் வேண்டு மானாலும் உருவாக்க முடியும் என்ற நிலையில், சமூக வலைதளங்களில் டீப்  பேக் வீடியோக்கள் பரவுவதை எந்த வொரு தொழில்நுட்பத்தாலும் தடுக்க முடியாது. முக்கியமாக தேர்தல் நேரத் தில் இந்த விவகாரத்தில் தலையிடுவது பொருத்தமாக இருக்காது. இந்த விவ காரத்தை தேர்தல் ஆணையத்திடமே விட்டுவிடுகிறோம்” எனக் கூறி மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

பனாஜி
“இந்தியா” கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் 
கட்சி மாறுபவர்களை தகுதி நீக்க சட்டம்

எதிர்க்கட்சிகளின் “இந்தியா” கூட்ட ணிக்கு நாடு முழுவதும் ஆதரவு  அலை பெருகி வரும் நிலையில், நடைபெற்றுக் கொண்டிருக்கும் மக்க ளவைத் தேர்தலில் “இந்தியா” கூட்டணி 330 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று  ஆட்சியைக் கைப்பற்றும் என பல்வேறு கருத்துக்கணிப்புகள் வெளியாகி வரு கிறது. 

இந்நிலையில், நடப்பு மக்களவைத்  தேர்தலில் “இந்தியா” கூட்டணி ஆட்சிக்கு  வந்ததும் 10 முதல் 15 மாநிலங்களில் பாஜக  தலைமையிலான அரசு கவிழும் என காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா எச்சரிக்கை செய்துள்ளார். கோவா மாநி லம் பனாஜியில் நடைபெற்ற செய்தியா ளர்கள் சந்திப்பில் இதுகுறித்து அவர்  மேலும் கூறுகையில்,”இந்தியா கூட்டணி  ஆட்சிக்கு வந்ததும் கட்சி மாறுபவர்களை  தகுதி நீக்கம் செய்ய அரசியல் சட்டத்தின்  10ஆவது அட்டவணை திருத்தம் செய்யப்  படும். அதனால் ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு மாறுபவர்கள் தகுதி  நீக்கம் செய்யப்படுவார்கள் என்பதால் 10  முதல் 15 மாநிலங்களில் பாஜக ஆட்சியை  இழக்கும்” என்று அவர் கூறினார். தேர்தல்  நடைபெறும் சமயத்திலேயே காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேராவின் இந்த கருத்து பாஜகவினருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.