புதுதில்லி முஸ்லிம்கள் அதிகம் வாழ்ந்தால், அந்த பகுதியை பாகிஸ்தான் என்று கூறுவீர்க ளா? என்றும், இந்தியாவின் பகுதிகளை பாகிஸ்தான் என்று கூறுவது அரசியல் சட்டத்தின் படி அடிப்படையிலேயே தவறானது என்றும் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியை உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது.
மேலும், வழக்கிற்கு தொடர்பில்லாத பெண் வெறுப்பு அல்லது பாரபட்சமான கருத்துக்க ளை, வகுப்புவாத அல்லது பாலின சார்புகளை வெளிப்படுத்துவது போன்ற ‘சாதாரண’ கருத்துக்களை நீதிமன்றத்தில் கூறுவதை நீதி பதிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் சாடி யுள்ளார்.
கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வேதவியா சாச்சார் ஸ்ரீஷானந்தா என்பவர் நீதிபதியாக உள்ளார். இவரது அமர்வில், கடந்த செப்டம் பர் 19 அன்று பெங்களூரு - மைசூரு மேம்பாலச் சாலை தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி வேதவியாசாச்சார் ஸ்ரீஷானந்தா கூறுகையில், “மைசூரு மேம் பாலம் அருகே உள்ள கோரிபாளையா பகுதி ஒரு பாகிஸ்தான் ஆகும். அது இந்தியா கிடையாது. அந்த பகுதிக்கு எப்படிப்பட்ட கறார் போலீஸ் அதிகாரி வந்தாலும், அவரை அங்குள்ளவர்கள் தாக்குகின்றனர்” என கூறினார்.
மேலும் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்க வில்லை எனக் கூறி, பெண் வழக்கறிஞர் ஒருவ ரையும் நீதிபதி வேதவியாசாச்சார் ஸ்ரீஷானந்தா கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தித் திட்டினார்.
இந்த வழக்கு விசாரணை தொடர்பான வீடி யோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி, கடும் எதிர்ப்புக்கும் கண்டனங்களுக்கும் உள்ளான நிலையில், மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், ‘எக்ஸ்’ வலைத்தளம் வாயிலாக இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றத் தலைமை நீதி பதியின் கவனத்துக்கு கொண்டு சென்று, உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
செப்டம்பர் 20 காலை உச்ச நீதிமன்றம் கூடிய தும், தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலை மையில் மூத்த நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பி.ஆர். கவாய், சூர்யகாந்த் மற்றும் ஹிருஷி கேஷ் ராய் ஆகியோர் அடங்கிய 5 நீதிபதிகள் அமர்வு இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
அத்துடன், இந்த விவகாரத்தில் உயர் நீதி மன்றத் தலைமை நீதிபதியிடம் அறிவுறுத்தலைப் பெற்று 2 நாட்களுக்குள் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கர்நாடக உயர் நீதிமன்றப் பதிவாளருக்கு உத்தரவிட்டது.
பிரச்சனை உச்ச நீதிமன்றம் வரை சென்ற தால், எச்சரிக்கையான நீதிபதி ஸ்ரீஷானந்தா “நீதித்துறை நடவடிக்கைகளின்போது நடந்த சில விஷயங்கள் சமூக வலைதளங்களில் சூழலுக்கு அப்பாற்பட்டதாக தெரிவிக்கப் பட்டது. அது உள்நோக்கத்துடனோ அல்லது யாருடைய மனதையோ அல்லது எந்த குறிப்பிட்ட சமூகத்தையோ புண்படுத்தும் நோக் கத்திலோ தெரிவிக்கப்படவில்லை. ஒருவேளை அந்த கருத்தில் யாருடைய மனதும் புண்பட்டி ருந்தால் அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறி, கண்டனத்திலிருந்து தப்பிக்கும் முயற்சியில் இறங்கினார்.
இந்நிலையில், புதனன்று (செப்.25) இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி ஸ்ரீஷானந்தாவுக்கு ஆதர வாக ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர். வெங்கடரமணி, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோர் ஆஜராகினர்.
அவர்கள், “நீதிபதி ஸ்ரீஷானந்தா கருத்து தெரிவித்த வீடியோவை பார்த்தோம். இந்த விவகாரத்தை தனிப்பட்ட முறையில், நீதிபதிகள் அறையில் வைத்து விசாரிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட நீதிபதி ஸ்ரீஷானந்தா மன்னிப்பு கோரியுள்ளார். எனவே வழக்கை மேலும் இழுக்க வேண்டாம், முடித்து வைக்க வேண் டும்” என்று வேண்டினர்.
அதற்குப் பதிலளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, “இந்த விவகாரத்தில் சம் பந்தப்பட்ட நீதிபதி ஸ்ரீஷானந்தா நீதிமன்றத்தில் நீதிமன்ற நடவடிக்கைகளின் போது மன்னிப்புக் கோரியுள்ளார் என்பதை பதிவாளர் அறிக்கை மூலம் அறிந்து கொண்டோம். நீதித்துறையின் கண்ணியத்தை கருத்தில் கொண்டு உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீஷானந்தாவுக்கு நோட்டீஸ் அனுப்புவதைத் தவிர்த்து விட்டோம். ‘பாகிஸ் தான்’ என்ற வார்த்தையை பயன்படுத்திய கர்நாடக நீதிபதி ஸ்ரீஷானந்தாவின் மன்னிப்பை ஏற்கிறோம்” என்று தெரிவித்தனர்.
முன்னதாக, தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கூறுகையில், “இந்த மின்னணு யுகத் தில் அனைத்து நிறுவனங்கள் மீது இருக்கும் எதிர்பார்ப்புகள் அவைகளின் பண்புகளை மேம்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம். நீதி பதிகளும் தங்களின் பண்புகளை மேம்படுத்திக் கொள்ளவேண்டும்” என்றதுடன், “யாரும் இந்தி யாவின் எந்தவொரு பகுதியையும் பாகிஸ்தான் என அழைக்க முடியாது. அடிப்படையில் இது நாட்டின் அரசியலமைப்புக்கு, பிராந்திய ஒரு மைப்பாட்டுக்கு எதிரானது” என்று கண்டனம் தெரிவித்தார்.
அத்துடன், “நீதிபதிகள், வழக்கறிஞர்கள், அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட அனை வரும் நீதிமன்ற வழக்கு விசாரணைகள், அதில் நேரடியாக பங்கு பெறாத நீதிமன்றத்துக்கு வெளியே இருக்கும் மக்களைச் சென்றடை கிறது என்பதை அறிந்திருக்க வேண்டும். வழக்கி ற்கு தொடர்பில்லாத பெண் வெறுப்பு அல்லது பாரபட்சமான கருத்துக்களை கூறுவதைக் கைவிட்டு, அரசியலமைப்பின் விழுமியங்களை நீதிபதிகள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். ஒரு நீதிபதியின் மனமும் ஆன்மா வும் பாரபட்சமின்றி இருந்தால் மட்டுமே, அவரால் சரியான நீதியை வழங்க முடியும்” என்றும் சாடினார்.