india

img

‘ஜோதிபாசு சமூக ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கு’ அடிக்கல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும், மேற்கு வங்க முன்னாள் முதல்வருமான மறைந்த தோழர் ஜோதிபாசுவின் 15-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவின் நியூடவுனில் “ஜோதிபாசு சமூக ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சி மையம் (ஜேபிசிஎஸ்எஸ்ஆர்)” கட்டிடத்திற்கு கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி புதனன்று அடிக்கல் நாட்டினார். மேற்கு வங்க இடது முன்னணி மற்றும் ஜேபிசிஎஸ்எஸ்ஆர் தலைவர் பிமன் பாசு, கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சூர்யகாந்த மிஸ்ரா, மாநிலச் செயலாளர் முகமது சலீம் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.