india

img

கெஜ்ரிவாலுக்கு 4 ஆவது முறையாக சம்மன்

மதுபானக் கொள்கை வழக்கு தொடர்  பாக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பா ளரும், தில்லி முதல்வருமான அர விந்த் கெஜ்ரிவாலுக்கு நவம்பர் 2,  டிசம்பர் 21, ஜனவரி 3 ஆகிய தேதிகளில்  ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்  மன் அனுப்பியது. ஆதாரம் இல்லாம லும், மக்களவைத் தேர்தலுக்கு பிரச்சா ரம் செய்வதை தடுக்கும் நோக்கத்தில் தன்னை கைது செய்யவே அமலாக்கத் துறை துடித்து வருவதாக கூறி மூன்று  முறையும் சம்மன்களை புறக்கணித்துள் ளார். இந்நிலையில், வரும் ஜனவரி 18-ஆம் தேதி ஆஜராகுமாறு அமலாக்கத் துறை 4-ஆவது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது. இந்த சம்மனில் ஆஜ ராகாமல் கெஜ்ரிவால் வழக்கம் போல  புறக்கணிப்பு வேலையில் ஈடுபட்டால்,  அவரை கைது செய்ய அமலாக்கத்துறை  திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது.