நாடாளுமன்ற நிகழ்வுகளை சன்சாத் தொலைக்காட்சி நிறு வனம் நேரடி ஒளிபரப்பு செய்து வருகிறது. ஒன்றிய அரசின் இந்நிறுவனம் கடந்த 17ஆவது மக்க ளவை காலத்தில், பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்கள், ஆளுங்கட்சி எம்.பி.க் களை மட்டுமே ஒளிபரப்பும். எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மோடி அரசுக்கு எதிராக பேசினாலோ, போராட்டத்தில் ஈடு பட்டாலோ சபாநாயகர் இருக்கையை மட்டுமே சன்சாத் தொலைக்காட்சி காண்பிக்கும். மைக் அணைப்பு சம்ப வங்களும் மிக அதிகமாக அரங்கேறின.
இந்நிலையில், 18ஆவது மக்கள வையிலும் மைக் அணைப்பு, சன்சாத் தொலைக்காட்சியில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் புறக்கணிப்பு நிகழ்வு தொடக்கத்திலேயே அரங்கேறியுள் ளது. சன்சாத் தொலைக்காட்சி நிறுவ னம் “இந்தியா” கூட்டணி எம்.பி.க்கள் பதவியேற்பு நிகழ்வை முரண்பாடான வகையில் ஒளிபரப்பிய நிலையில், புத னன்று மக்களவையில் தொல்.திருமா வளவன் பேசிக் கொண்டிருந்தபோது மைக் அணைக்கப்பட்டதால் அவர் அதிருப்தி அடைந்தார். மைக் அணைக் கப்பட்டபோதும் திருமாவளவன் தொடர்ந்து பேசினார். நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த காந்தி உள்ளிட்ட தலைவர்களின் சிலைகள் இடமாற்றம் செய்தது குறித்து கேள்வி எழுப்பிய போது மைக் அணைக்கப்பட்டது. மக்க ளவையில் திருமாவளவன் பேசிய போது மைக் அணைக்கப்பட்டதற்கு “இந்தியா” கூட்டணி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.