india

img

ஜம்மு - காஷ்மீருக்கு 3 கட்டங்களாக தேர்தல்!

புதுதில்லி, ஆக. 16 - ஹரியானா மற்றும் ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டமன்றங்களுக்கான தேர்தல் தேதியை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தலைமைத் தேர்தல் ஆணை யர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணை யர்கள் ஞானேஷ் குமார் மற்றும்  சந்து ஆகியோர் வெள்ளிக்கிழமை யன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது, ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாகவும், ஹரியானாவுக்கு அக்டோபர் 1 அன்று ஒரே கட்டமாகவும் தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தனர்.

இதில், 3 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறும் ஜம்மு  - காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு முறையே ஆகஸ்ட் 20, 29 மற்றும் செப்டம்பர் 5 ஆகிய நாட்களில் வேட்பு மனுத் தாக்கல் துவங்குகிறது.

ஹரியானாவில் வேட்புமனுத் தாக்கல் செப்டம்பர் 5-இல் துவங்கி 12-ஆம் தேதி நிறைவடைகிறது. 

ஜம்மு - காஷ்மீர் மற்றும்  ஹரியானா ஆகிய 2 மாநிலங்களி லும் பதிவான வாக்குகள் அக்டோபர் 4 அன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

ஹரியானா மாநிலத்தில் மொத்தம் 90 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இதில் 73 பொதுத் தொகுதி கள். 17 தனித் தொகுதிகள். 2024 ஆகஸ்ட் 2 அன்றைய நிலவரப்படி, 2.01 கோடி வாக்காளர்கள் உள்ள னர். இதேபோல ஜம்மு - காஷ்மீரி லும் 90 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவற்றில் பொதுத் தொகுதிகள் 74. பழங்குடியினருக்கு 9, பட்டியல் வகுப்பினருக்கு 7 என மொத்தம் 16 தனித்தொகுதிகள் உள்ளன.

10 ஆண்டுகளாக தேர்தல் நடத்தாத மோடி அரசு!

கடைசியாக ஜம்மு - காஷ்மீருக்கு கடந்த 2014-இல் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது.  அப்போது, யாருக்கு பெரும்பான்மை கிடைக்க வில்லை. மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சி 28 இடங்களையும், பாஜக 25 இடங்களையும், உமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சி 15 இடங் களிலும், காங்கிரஸ் 12 இடங்களையும் கைப்பற்றி இருந்தன. 

இதையடுத்து பாஜகவும், மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சியும் கூட்டணி அமைத்து ஆட்சியில் அமர்ந்தன. மெகபூபா முப்தி முதல்வராக இருந்தார். இந்தக் கூட்டணி ஆட்சி 4 ஆண்டுகள் நடந்தது. அதன்பிறகு கதுவாவில் 8 வயதுச் சிறுமி ஆஷிபாவை வல்லுறவுக்கு உள்ளாக்கி படுகொலை செய்த ஆர்எஸ்எஸ் - பாஜக பேர்வழிகள், இச்சம்பவம் அங்கு ஏற்படுத்திய பதற்றத்தின் பின்னணியில், தங்களின் ஆதரவைத் திரும்பப் பெற்று மெகபூபா ஆட்சியைக் கவிழ்த்தனர்.

பாஜகவின் சதியை உணர்ந்த காங்கிரஸ், பிடிபி, தேசிய மாநாடு கட்சிகள், தங்களுக்கு உள்ளான பகையைக் கடந்து, கூட்டணி ஆட்சி அமைக்க முயன்ற 
நிலையில், ஒன்றிய ஆட்சியதிகாரத்தை வைத்து, அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை பாஜக அமல்படுத்தியது.

அடுத்த சில மாதங்களில், குடியரசுத் தலைவர் ஆட்சியைப் பயன்படுத்தி, ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு  அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்து, மாநில அந்தஸ்தைப் பறித்து,  ஜம்மு - காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங் களாக்கியது. அதன் பிறகும் தேர்தல் நடத்த முன்வராத ஒன்றிய பாஜக அரசு, மாநிலத்திலுள்ள முஸ்லிம்களின் பெரும்பான்மையைச் சிதறடிக்கும் வகையில், தொகுதி மறுவரையறை என்ற பெயரில் மோசடியில் இறங்கியது. இதனை 2022 வரை இழுத்தடித்தது.

இந்துக்கள் அதிகம் வசிக்கும் ஜம்மு பகுதியில் 6 புதிதாக சட்டமன்றத் தொகுதிகளை உருவாக்கியது. முஸ்லிம்கள் அதிகமுள்ள காஷ்மீர் பகுதியில் 1 தொகுதி யை மட்டும் அதிகரித்தது. இவ்வாறு மாநிலத்தை முற்றிலும் தமக்கு சாதகமாக மாற்றிக் கொண்டது.

இதனிடையே, “2024  செப்டம்பர் 30-க்கு முன்பாக, எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக ஜம்மு - காஷ்மீர் சட்டப் பேரவைக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணை யத்திற்கு உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர் வும் கடந்த 2023 டிசம்பர் 12 அன்று உத்தரவிட்டது.

இந்தப் பின்னணியிலேயே தற்போது ஜம்மு - காஷ்மீருக்கு தேர்தலை அறிவித்துள்ளது. இதன்மூலம் ஜம்மு - காஷ்மீருக்கு 10 ஆண்டுகளுக்கு பிறகு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.